குர்-ஆனும் விஞ்ஞானமும்: பீஜேவிற்கு கேள்வி - இயேசு குளோனிங் முறையில் கருத்தரிக்கப்பட்டாரா? இயேசு அல்லாஹ்வின் DNA வாக இருந்தாரா?

முன்னுரை: உலகின் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்புக்களின் விவரங்களை நாம் குர்-ஆனில் காணலாம். இது என் கூற்று அல்ல, இது இஸ்லாமிய அறிஞர்களின் நம்பிக்கை. இதற்காக, சில ஒற்றுமைகளை குர்-ஆன் வசனங்களில் காண்பித்து, "இதோ, குர்-ஆன் விஞ்ஞானம் பற்றி பேசுகிறது" என்று இஸ்லாமிய பெருமக்கள் யேசு குழந்தையாக இருக்கும் போது பேபெருமையாக பேசிக்கொள்வார்கள். ஆனால், உண்மையில் குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டா? கீழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்கி சில விவரங்களை படித்துக்கொள்ளுங்கள்.

1. குர்-ஆனும் விஞ்ஞானமும்: பீஜேவிற்கு கேள்வி - மரியாள் இயேசுவை நீருக்குள் பெற்றெடுத்தார்களா?

2. நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் காணப்படுமா? ('குர்-ஆனில் விஞ்ஞானம்' காணப்படுகிறது என்பவர்களுக்கு பொதுவான மறுப்பு)

3. குர்-ஆனின் கட்டுக்கதைகளும், பழங்கதைகளும் - சாலொமோனின் பறக்கும் பாய்!

4. குர்-ஆன் சம்மந்தப்பட்ட கட்டுரைகள்

பீஜே அவர்களும் குளோனிங் முறையும்

பீஜே அவர்கள் தன் பங்கிற்கு, குர்-ஆன் வசனங்களில் விஞ்ஞானம் உண்டு என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். நீருக்குள் பிரசவம் என்ற தலைப்பில் இவர் விவரித்த விஞ்ஞானம் பற்றி நான் ஒரு பதிலை கொடுத்து இருந்தேன், அதனை நீங்கள் மேலே தரப்பட்ட தொடுப்பில் படிக்கலாம்.

மேலும், இயேசுவின் பிறப்பை சம்மந்தப்படுத்தி, அவர் குளோனிங் முறைப் பற்றி கொடுத்த இன்னொரு விஞ்ஞான விளக்கத்திற்கு பதிலை இப்போது காண்போம். இப்படி தனக்கு தோன்றியபடி பீஜே அவர்கள் எழுதுவதினால், சில நேரங்களில் தனக்கே தெரியாமல் இஸ்லாமை கதிகலங்க வைக்கும் சில விபரீதமான விஷயங்களையும் அவர் சொல்லிவிடுவதுண்டு. இயேசுக் கிறிஸ்து என்பவர் இறைவனின் (அல்லாஹ்வின்) DNA மரபணுவாக இருக்கிறார் என்பதை இவர் தனக்கே தெரியாமல் ஒப்புக்கொண்டுள்ளார்.

இயேசு அல்லாஹ்வின் மரபணு மூலமாக உருவாக்கப்பட்டார் என்றுச் சொன்னால், "இயேசு தான் அல்லாஹ்" என்று பொருள் வந்துவிடுகிறது. எவ்வளவு பெரிய தவறை பீஜே செய்துவிட்டார்! குர்-ஆனில் விஞ்ஞானத்தை கண்டுபிடித்தவர்,  உண்மையில் அஞ்ஞானியாகிவிட்டாரே! அந்தோ பரிதாபம்.

சரி, இப்போது அவரது குளோனிங் விஞ்ஞான விளக்கத்தை கவனிப்போம்.

1) பீஜே அவர்களின் குர்-ஆன் விளக்கக் குறிப்பு: 415 – குளோனிங் சாத்தியமே!

பீஜே அவர்கள் தன் குர்-ஆன் தமிழாக்கத்தின், 415வது விளக்கத்தில் "குளோனிங் சாத்தியமே!" என்ற தலைப்பில், இயேசுவின் பிறப்பை சம்மந்தப்படுத்தி, குளோனிங் பற்றி விவரித்துள்ளார்.  இந்த விளக்கத்தில் சில விபரீதமான விஷயங்களை அவர் கூறியுள்ளார். இஸ்லாமுக்கு எதிராகவும், குர்-ஆனுக்கு விரோதமாகவும், அல்லாஹ்வின் தெய்வீகத்திற்கு (ஏகத்துவத்திற்கு)  விரோதமாகவும் அவர் கூறியுள்ளார்.  பீஜே அவர்கள் சிறிது தீர்க்கமாக சிந்தித்து இருந்திருந்தால், இப்படியெல்லாம் எழுதியிருக்கமாட்டார்.  அடுத்த குர்-ஆன் பதிப்பின் போது, அவர் இந்த தலைப்பு பற்றி சிறிது சிந்திப்பார் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம்.

அவர் கொடுத்த விளக்கத்தில் மிகவும் முக்கியமானவைகளை மட்டும் நான் இங்கு மேற்கோள் காட்டுகிறேன்.  அவரது குர்-ஆன் தமிழாக்கம் உள்ளவர்கள் இந்த 415வது குறிப்பை முழுவதுமாக  படித்துக்கொள்ளலாம், மேலும் இணையத்திலும் (http://www.onlinepj.com/) சொடுக்கி படித்துக்கொள்ளலாம்.

//பீஜே அவர்கள் எழுதியது:

415. குளோனிங் சாத்தியமே!//

பீஜே அவர்களே, குளோனிங் சாத்தியம் தான் என்றுச் சொல்லி உங்கள் சொந்த விளக்கத்தை கொடுத்து இருந்திருந்தால், பிரச்சனை இல்லை. ஆனால், நீங்கள் குர்-ஆனை இதற்காக வம்புக்கு இழுத்ததாலும், இயேசுவின் பிறப்பையும் இதற்குள் நுழைத்ததாலும் இப்போது பிரச்சனையில் மாட்டியுள்ளீர்கள்.  உங்களின் விஞ்ஞான விளக்கம் எவ்வளவு பெரிய தவறாக உள்ளது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறேன்.

//பீஜே அவர்கள் எழுதியது:

ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித் தாய் மூலம் இறைவனின் தனிப் பெரும் ஆற்றலால் பிறந்தார்கள். இந்த நிகழ்ச்சியை வெறும் வரலாறாக மட்டும் திருக்குர்ஆன் கூறாமல் இது ஓர் அத்தாட்சியாக உள்ளது' என்றும் கூறி, இது குறித்து சிந்திக்கத் தூண்டுகிறது.

மனிதர்கள் முயற்சி செய்தால், இது சாத்தியமாகும் என்பது இல்லாவிட்டால் இதைச் சிந்திக்கத் தூண்டுவதில் பொருள் இருக்காது. //

இயேசுக் கிறிஸ்து ஆணின் உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார், இது  ஒரு அற்புதம் என்றுச் சொல்லி நீங்கள் எழுதியிருந்தால், உங்கள் மீது தவறில்லை.  ஆனால், ஒரு விஞ்ஞான முலாம் பூசி உங்கள் லாஜிக்கை இங்கே நுழைக்கப் பார்த்தீர்களே, அது தான் நீங்கள் செய்த தவறு.

"இது ஒரு அத்தாட்சியாக உள்ளது, இதைப் பற்றி சிந்தியுங்கள்" என்று குர்-ஆன் சொல்வது, மனிதர்கள் சிந்தித்து, குளோனிங் முறையை கண்டுபிடியுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறார் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களா?

நீங்கள் சொல்வது உண்மையானால், ஏன் கடந்த 1400 ஆண்டுகளாக ஒரு இஸ்லாமியரும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை? ஏன் ஒரு இஸ்லாமிய அறிஞரும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை?

ஏதோ, ஒரு இஸ்லாமியரல்லாதவர் (குர்-ஆனை படிக்காமல்) சொந்தமாக சிந்தித்து ஒரு அறிய கண்டுபிடிப்பை கொண்டுவந்தால், அதை நீங்கள் சொந்தம் கொண்டாட நினைக்கிறீர்களோ?

பீஜே அவர்களே, இன்னும் நிறைய காலம் இருக்கிறது, நீங்கள் உட்கார்ந்து எங்கேயெல்லாம் குர்-ஆன் சிந்திக்கச்சொல்கிறதோ, அத்தாட்சியாக உள்ளது என்றுச் சொல்கிறதோ, அங்கேயெல்லாம் இன்னும் என்னென்ன கண்டுபிடிப்புக்களை அல்லாஹ் மறைத்துள்ளான் என்பதை ஆய்வு செய்து இன்னும் 100 ஆண்டுகளுக்குள் என்னென்ன விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் உலகில் வரவேண்டுமோ, அவைகளை இப்போது சிந்தித்து உங்களால் சொல்லமுடியுமா? 

நீங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் உட்கார்ந்து (சண்டைப்போடாமல், ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளாமல்)  குர்-ஆனின் அடிப்படையில் புதிய கண்டுபிடிப்புக்களை சிந்தித்துச் சொல்லுங்கள். இப்படி நீங்கள் செய்தால்,  உங்கள் குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டு என்பதை அப்போது ஒப்புக்கொள்கிறோம்.

//பீஜே அவர்கள் எழுதியது:

இன்றைய நவீன உலகில் உயிரினங்களின் உயிரணுவுக்கு மாற்றாக மரபணுவைப் பயன்படுத்தி உயிரினங்களை உண்டாக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். . . . . . . சாதாரண குழந்தையைப் பெற்றெடுப்பது போல் அக்குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது.

. . . . .

மனிதனிடம் இது சோதித்துப் பார்த்து நிரூபிக்கப்படாவிட்டாலும் ஆடு, எருமை, பன்றி போன்ற உயிரினங்களில் இதைச் சோதித்து விஞ்ஞானிகள் வெற்றி கண்டிருக்கிறார்கள்.//

மேற்கண்ட மேற்கோளில், நான் பீஜே அவர்களின் சில வரிகளை மட்டுமே கொடுத்துள்ளேன். ஏனென்றால், அவைகளில் பீஜே அவர்கள் "குளோனிங்" பற்றி ஒரு பொதுவான விவரத்தை கொடுத்துள்ளார்.

சில இடங்களில் பீஜே அவர்கள் சிறிது குழம்பியுள்ளார்கள், அதாவது "சோதனைக் குழாய் குழந்தை (Test Tube Baby)" மற்றும் "குளோனிங் முறை (Cloning)" இந்த இரண்டிற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை சரியாக புரிந்துக்கொள்ளாமல் எழுதியுள்ளார். இந்த கட்டுரையின் நோக்கம் அவரது குழப்பம் பற்றி ஆராய்வதல்ல என்பதால், மேலதிக விளக்கத்திற்கு நான் செல்லவிரும்பவில்லை. குளோனிங் முறை என்பது மிகவும் சிக்கலான விஷயம், எனவே கீழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்கி மேலதிக விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்:

1) சோதனைக் குழாய் குழந்தை - Test Tube Baby

2) குளோனிங் முறை - Cloning and Human Cloning

அடுத்ததாக, அவர் என்ன எழுதியுள்ளார் என்பதை பார்ப்போம்.

//பீஜே அவர்கள் எழுதியது:

மனிதனைப் பொறுத்த வரை அவனைக் குளோனிங் செய்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். 25 வயதுடைய ஒருவரது மரபணுவை எடுத்து குளோனிங் செய்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது வடிவத்தில் குழந்தையாக இருந்தாலும் அதன் மரபணுவைப் பொறுத்த வரை அதன் வயது 25 ஆகும். எனவே 25 வயதுடையவனின் அறிவும் சிந்தனையும் அந்தக் குழந்தைக்கு இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.//

பீஜே அவர்களே, விஞ்ஞானிகளின் கணிப்புப் படி, 25 வயதுடைய மரபணு(DNA) மூலமாக உருவாக்கப்படும் குழந்தை, 25 வயதுடைய அந்த மனிதனின் அறிவும், சிந்தனையும் கொண்டு இருக்கும்.

அதே போல, அல்லாஹ்வின் மரபணு(DNA) மூலமாக உருவாக்கப்படும் குழந்தை (இயேசுக் கிறிஸ்து) பிறக்கும் போதே, அல்லாஹ்விற்கு இருக்கும் அறிவுடனும், சிந்தனையுடனும் இருப்பார் என்றுச் சொல்லலாம் இல்லையா?

//பீஜே அவர்கள் எழுதியது:

இந்த விபரங்களைக் கவனத்தில் வைத்து, ஈஸா நபியின் பிறப்பு பற்றிக் குர்ஆன் கூறுவதைச் சிந்தித்துப் பார்ப்போம்.

தந்தையில்லாமல் ஒரு குழந்தையை இறைவன் உருவாக்க நாடினால், ஆகு என்று சொல்லியே அவனால் உருவாக்க முடியும். அப்படியிருந்தும் ஒரு வானவரை மனித வடிவில் அனுப்பி, அந்த வானவர், ஈஸாவின் நபியின் தாயாரான மர்யமிடம் ஊதினார் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் இறைவனின் ஆற்றலால் உருவாக்கப் பட்ட ஒரு மரபணுவை அந்த வானவர் மர்யம் (அலை) அவர்களிடம் ஊதியிருக்கலாம் என்பதையும், எந்த முறையில் குழந்தை உருவாவதாக இருந்தாலும் முடிவில் தாயின் கருவறை அவசியம் என்பதையும் இந்நிகழ்ச்சி நமக்குக் காட்டுகின்றது.//

பீஜே அவர்களே, நீங்கள் விஞ்ஞானத்தை விளக்கிவிட்டு, இப்போது  குர்-ஆனுக்கு வந்துள்ளீர்கள்.

ஒன்றை சரியாக நீங்கள் புரிந்துக்கொள்ளுங்கள். இறைவன் அற்புதம் செய்தால், அது அற்புதம் தான், அதனுள் விஞ்ஞானத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், விளைவுகள் உங்களுக்கு சில நேரங்களில் சாதகமாக அமையாது.  இறைவன் "ஆகு" என்று சொல்லிவிட்டால், அவ்வளவு தான், அது உண்டாகிவிடும். மேலும இறைவன் எப்படி அற்புதம் செய்கிறார் என்பதை ஆராய்ச்சி செய்து, அதற்கு ஒரு விஞ்ஞான உடையை உடுத்த முயற்சிக்கிறீர்கள் நீங்கள்.  இதனால் உண்டான விளைவு என்ன? இப்போது காண்போம்.

2) அல்லாஹ்வின் ஆற்றலினால் உண்டான மரபணு:

வானவர் ஊதினது, மரபணு என்று உங்களுக்கு கூறியது யார்? உங்களுக்கு எப்படித் தெரியும் அது மரபணு என்று? உங்களுக்கே சந்தேகமாக இருக்கும் பொது, ஏன் இந்த வேண்டாத ஆராய்ச்சிகள்? "ஊதியிருக்கலாம்" என்ற வார்த்தையிலிருந்து உங்களுக்கே சந்தேகம் இருக்கிறது என்று தெரியவருகிறது, அப்படியிருக்கும் போது, ஏன் "குளோனிங் சாத்தியமே" என்ற விளக்கம்?

நீங்கள் அல்லாஹ்வின் ஆற்றலினால் உண்டான மரபணு என்கிறீர்கள், ஆனால், நீங்கள் மேற்கோள் காட்டிய வசனம், அந்த உயிர் அல்லாஹ்வினுடையது என்றுச் சொல்கிறதே!

குர்-ஆன்  21:91ஐ இப்போது படிப்போம்:

தனது கற்பைக் காத்துக் கொண்ட பெண்ணிடம் நமக்குரிய உயிரை ஊதினோம் 90. அவரையும், அவரது புதல்வரையும் அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.415

மேற்கண்ட வசனத்தில், "நமக்குரிய உயிரை ஊதினோம்" என்று அல்லாஹ் சொல்கிறார்.  நீங்கள் விளக்கும் பொது, அல்லாஹ் ஒரு மரபணுவை உருவாக்கி, வானவர் மூலம் ஊதவைத்தார் என்றுச் சொல்கிறீர்கள்.  இப்போது இதனை நாம் எப்படி விளங்கிக்கொள்வது?

1) அல்லாஹ் ஊதியது தன்னுடைய உயிரையா? அல்லது

2) பீஜே அவர்கள் விளக்கியது போல, அவர் உருவாக்கின ஒரு மரபணுவையா?

3) அல்லாஹ் உருவாக்கியது ஒரு மரபணு என்றுச் சொன்னால், அந்த மரபணு யாருடையது? ஏதாவது ஒரு மனிதனின் உடலிலிருந்து எடுத்த மரபணுவா? அல்லது அல்லாஹ்வின் சொந்த மரபணுவா?

4) இல்லை, அல்லாஹ் ஊதியது ஒரு உயிர் தான், அது மரபணு அல்ல என்றுச் சொன்னால், பீஜே அவர்களின் விளக்கம் குர்-ஆனுக்கு எதிரான ஒன்றாக அமையவில்லையா? அல்லாஹ் சொல்லாத ஒன்றை பீஜே அவர்கள் சொந்தமாக இட்டுக்கட்டி கூறியதாக ஆகிவிடாதா?

இப்படி அனேக கேள்விகள் எழுகின்றன, இவைகளுக்கு பீஜே அவர்கள் விளக்கம் அளிப்பாரா?  

[மேற்கண்ட வசனத்தில், 90வது குறிப்பு ஒன்று உள்ளது, அது ஆதாமுக்குள் அல்லாஹ் ஊதிய உயிர் பற்றி பேசுகிறது. இதைப் பற்றி விவரமாக நாம் அடுத்த பதிலில் கர்த்தருக்கு சித்தமானால் காண்போம். எப்படி பீஜே அவர்களின் ஒரு விளக்கம் இன்னொரு விளக்கத்தோடு மோதுகிறது என்பதை அக்கட்டுரையில் காண்போம். ஆதாமையும் இயேசுவையும் படைத்தவிதம் ஒரே விதம் என்று குர்-ஆன் கூறுவது பற்றி விவரமாக பார்ப்போம்.]

[வானவர் ஊதிய நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட குர்-ஆன் வசனம் பற்றி  ஒரு கட்டுரையை தனியாக காண்போம். அதாவது, குர்-ஆன் வசனத்தை தமிழாக்கம் செய்யும் போது, சிலர் மரியாளின் உடைக்குள் வானவர் ஊதினார் என்று மொழியாக்கம் செய்கிறார்கள். ஆனால், மூல அரபியில் வேறு விதமாக உள்ளது. அப்படியானால், ஏன் மொழியாக்கம் செய்யும் போது இவர்கள் மாற்றி மொழியாக்கம் செய்கிறார்கள், இதைப் பற்றி நாம் இன்னொரு புதிய கட்டுரையில் காண்போம். இப்போது இந்த கட்டுரையின் தலைப்பை விட்டு வெளியே செல்லாமல் நாம் ஆராய்வோம்]

//பீஜே அவர்கள் எழுதியது:

அடுத்ததாக நாம் சிந்திக்க வேண்டிய விஷயம், ஈஸா நபியவர்கள் பிறந்தவுடனே பேசியதாகவும் இதில் கூறப்படுகின்றது. தந்தையில்லாமல் பிறந்ததால் அற்புதம் என்ற அடிப்படையில் பிறந்தவுடன் சில வார்த்தைகளைப் பேசி விட்டு அதன் பிறகு குழந்தைத் தன்மையுடையவராக அவர் இருந்திருப்பார் என்று நினைக்கலாம். இது தவறாகும். ஏனெனில், அவர் குழந்தையாக இருக்கும் போது பேசினார் என்பதுடன் அவரை அப்போதே இறைத் தூதராகவும் ஆக்கியதாக இங்கு கூறப்படுகிறது.

இறைத் தூதர் என்றால், இறைச் செய்திகளைச் சரியாக விளங்க வேண்டும், அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை அறிவோம்.

பிறந்தவுடனேயே ஈஸா நபியவர்கள் பேசியதுடன், இறைச் செய்திகளை விளங்கி, மக்களிடம் எடுத்துச் சொல்லும் அளவுக்கு முதிர்ச்சி உடையவர்களாக இருந்தது மனிதக் குளோனிங் பற்றிய விஞ்ஞானிகளின் கருத்துக்கு ஒத்ததாக இருக்கின்றது.

இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 3:46, 19:21, 19:29,30, 21:91, 23:50// 

பீஜே அவர்களே, உங்கள் விளக்கம் பிரச்சனையை அதிகமாக்குகிறதே தவிர, இஸ்லாமை காப்பாற்றுவதாக இல்லை. உங்களின் விளக்கத்தின் படி:

  • இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசினார்.
  • அவரது அந்த பேச்சுத்திறமை, அவரை அல்லாஹ் எடுத்துக்கொண்டது வரை இருந்தது.
  • குழந்தையாக இருந்த நாளிலிருந்தே, பேச்சு மட்டுமல்ல, ஒரு முதிர்ந்த இறைத்தூதர் போல  அவர் இறைச் செய்தியை புரிந்துக்கொண்டு, அதனை மக்களுக்கு விளக்கும் அளவிற்கு முதிர்ச்சியுள்ளவராக இருந்தார்.
  • உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால், நாற்பது வயதில் எப்படி முஹம்மது இருந்தாரோ, அந்த அளவிற்கு பிறந்த குழந்தையாகிய இயேசு இருந்தார், பேசினார், சிரித்தார், வாதம் புரிந்தார், இறைச் செய்தியை விளக்கினார்.

இது தான் உங்களுடைய விளக்கத்தின் சுருக்கம், இதனை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன் (ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், உங்கள் விளக்கத்தில் நீங்கள் சொன்னதின் அர்த்தமென்ன என்பதை விளக்கவும்).

பீஜே அவர்களின் விளக்கம் உண்டாக்கிய பிரச்சனைகள்:

ஏதோ விஞ்ஞானம் பற்றி எழுதவேண்டும், குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டு என்பதை உலகத்திற்கு காட்டவேண்டும் என்ற நப்பாசையில், தனக்கு வந்தபடி எழுதியுள்ளார் பீஜே. இப்போது கீழ்கண்ட பிரச்சனைகளுக்கு அவர் பதில் அளிக்கட்டும்:

1) ஒரு குழந்தை பிறந்தது முதல், இறைச்செய்தியை சொல்லி, மக்களை நல்வழிப்படுத்தினால், இது என்ன சாதாரண அற்புதமா? உலக மகா அற்புதம்.  

2) இவ்வளவு பெரிய அற்புதத்தை, அல்லாஹ் இயேசுவிற்கு மட்டும் செய்ய முக்கிய காரணமென்ன? அனேக நபிகள் (தீர்க்கதரிசிகள்) வந்தார்கள், ஒருவருக்கும் இல்லாத ஒரு சிறப்பான அற்புதம் இயேசுவிற்கு மட்டும் செய்ய காரணம் என்ன? ஒரு காரணமும் இல்லாமல் "சும்மா செய்தேன்" என்றுச் சொல்ல அல்லாஹ் சாதாரண மனிதன் அல்லவே!

3) ஆதாமுக்கு அப்பா இல்லை, காரணம் அவர் தான் முதல் மனிதர், எனவே அப்பா இல்லை, அல்லாஹ் மண்ணினால் அவனை படைத்தார். ஆனால், இயேசுவின் விஷயத்தில் ஏன் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் அல்லாஹ் செய்யவேண்டும்? யோசேப்பு என்பவரோடு மரியாளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஒருவேளை யோசேப்பு இல்லாவிட்டாலும், வேறு ஒரு ஆணை திருமணம் செய்துக்கொண்டு, இயற்கையான முறையில் (ஆண், பெண் உறவுடன்) இயேசு பிறந்திருக்கலாம். ஏன் அல்லாஹ் ஒரு இயற்கைக்கு எதிராக இயேசுவின் விஷத்தில் செயல்பட வேண்டும்?

4) இயேசு குழந்தையாக இருக்கும் போதே, வாலிபனான ஒரு ஆணுக்கு இருக்கும் அறிவும், சிந்தனையும்  இருக்கிறது என்று பீஜே கூறினால், இயேசு ஒரே சமயத்தில் ஒரு முதிர்ச்சியான மனிதனாகவும், அதே நேரத்தில் ஒரு குழந்தையாகவும் எப்படி அவரால் இருக்கமுடிந்தது? அதாவது தான் பிறந்து சில நாட்கள் கடந்த குட்டி இயேசு இறைச்செய்தியை மக்களுக்கு சொல்லிவிட்டு, மிகப்பெரிய சொற்பொழிவை  செய்துவிட்டு, மறுபடியும் தன் அம்மாவிடம் வந்து அந்த குட்டி இயேசு பால் குடித்தாரா? 

5) குழந்தையாக இயேசு இருந்துக்கொண்டு, அல்லாஹ்வின் இறைச் செய்தியை மக்களுக்கு சொல்லிவிட்டு, அதன் பிறகு தான் படுத்திருந்த இடத்திலேயே மலஜலம் கழித்தாரா? அவரை மரியாள் சுத்தம் செய்தார்களா?

6) நான் என்ன சொல்ல வருகிறேன்  என்று பீஜே அவர்களுக்கு புரிகின்றதா?  இயேசு பிறந்தது முதல் ஒரு இறைத்தூதராக இருந்தால், அவர் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதன் சிந்திப்பது போல சிந்தித்தால்,  எப்படி அவரால் குழந்தையைப் போல நடந்துக்கொள்ளமுடியும்?  அக்காலத்து மக்களுக்கும்  இது அதிக பிரச்சனையை உண்டாக்கியிருக்கும் இல்லையா?

7) தன் நிஜாரிலேயே மலஜலம் செய்யும் ஒரு குழந்தை,  உலக மக்களுக்கு இறைச்செய்தியை சொல்லி, விவரமாக விளக்கினால், மக்கள் அதனைக் கண்டு பிரமிப்பார்கள். ஆனால், உண்மையில் வேறு சில குர்-ஆன் வசனங்களை காணும்போது, மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல், அவரை கொலை செய்ய முயன்றதாக காண்கிறோம். பீஜே அவர்களே, எங்கேயோ இடிக்கிறதே! உங்கள் குளோனிங் விஞ்ஞான அற்புதத்தில் ஏதோ குறைபாடு இருப்பதாக தெரிகின்றதே!

8) இயேசு பிறந்தது முதல், வாலிபனாகும் வரைக்கும் (தோராயமாக 33 ஆண்டுகள்)  அவர் இறைத்தூதராக இருந்தால், அவர் குழந்தையாக இருக்கும் போது செய்த அற்புதங்கள் எங்கே? ஒரு பறவையை அவர் உண்டாக்கியது ஒரு பாலகனாக இருக்கும்  போது என்றால், இதர அற்புதங்கள் பற்றி அல்லாஹ் ஏதாவது கூறியுள்ளாரா?

9) பீஜே அவர்கள் சொன்னது போல உண்மையில் நடந்து இருந்தால், உலக வரலாறு அதனை பதிவு செய்து இருக்கும். இயேசு குழந்தையாக இருக்கும் போதே,  அக்காலத்தில் இருந்த நாடுகளில் அவரது கீர்த்தி பரவியிருக்கும்.  அவரைக் காண பல நாடுகளிலிருந்து, ஊர்களிலிருந்து மக்கள் அலையலையாய் வந்து அவரை கண்டு இருந்திருப்பார்கள். ஆனால், உண்மையில் அவர் ஒரு தச்சனின் மகன் என்று தான் உலகம் அவரை அறிந்திருந்தது. எனவே, பீஜே அவர்களே, உங்களின் கூற்று மிகப்பெரிய பொய் மூட்டையாகும்.

பீஜே அவர்களே, நீங்கள் எழுதிய விளக்கம், நகைப்பிற்கு உரியது. அதில் கொஞ்சமும் சத்தும் இல்லை, சத்தியமும் இல்லை.

3) மனித குளோனிங் என்பது அல்லாஹ்விற்கு விரோதமல்லவா?

மனிதர்களை செயற்கையாக படைப்பது என்பது இறைவன் உருவாக்கிய இயற்கை முறைக்கு எதிரானதாகுமல்லவா? உலக மக்கள் பெருக்கத்திற்கு இறைவன் உண்டாக்கிய ஒரு வழிமுறை திருமணமாகும். அதாவது ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தால் இணைந்து, உடலுறவினால் ஒன்று சேர்ந்து, மக்களை பெறவேண்டும் என்பதாகும். ஆனால், குளோனிங் முறையினால், மனிதர்களை உண்டாக்கினால் இதனால் அனேக சமூக சீர்கேடுகள் உண்டாக வாய்ப்பு இருக்கின்றது. எனவே, அனேக அமைப்புக்கள், முக்கியமாக மத அமைப்புக்கள் இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கின்றன. குளோனிங் முறையினால் நன்மைகளை விட தீமைகள் அதிகமாக விளையும் என்று நம்பப்படுகின்றது. இவைகளையெல்லாம் கண்டுக்கொள்ளாமல், ஒரு மார்க்க தலைவர், இந்த குளோனிங் முறையை அல்லாஹ் தன் நபி ஒருவரின் வாழ்வில் நிகழ்த்திக்காட்டினார், எனவே, இது சாத்தியமே, மற்றும் நல்லதே என்ற தோரணையில் எழுதுகிறார். (சோதனைக் குழாய் குழந்தை என்பது வேறுவகையான ஒன்றாகும்)

பீஜே அவர்களே, ஒரு கேள்வியைக் கேட்கட்டுமா?  இதை ஒரு எடுத்துக்காட்டுக்காகச் சொல்கிறேன், தவறாக நினைக்கவேண்டாம்.  இந்த குளோனிங் முறையை நீங்கள் ஆதரிப்பதாக தெரிகின்றது. ஒரு வேளை உங்கள் உடலிலிருந்து ஒரு மரபணுக்களை எடுத்து, உங்களைப் போலவே இன்னும் நான்கு பீஜேக்களை விஞ்ஞானிகள் உருவாக்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மேலும், விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சியினால், ஒரு வருடத்திலேயே அவர்கள் உங்கள் வயதுக்கு சமமான பீஜேக்களை உருவாக்கிவிட்டால். உங்கள் நிலை என்னவாகும்? மொத்தம் 5 பீஜேக்கள் இருப்பார்கள். இந்த நான்கு குளோனிங் பீஜேக்கள், உங்கள் வீட்டிற்கு வந்து, இதோ இவன் என் மகன் என்று உங்கள் மகனை உரிமை பாராட்டுவார்கள். இதோ இவர் என் மனைவி என்று உங்கள் மனைவியை உரிமை பாராட்டுவார்கள். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இவர்கள் மீது வழக்கு தொடருவீர்களா? இவர்கள் வேறு யாருமில்லை, இவர்கள் நீங்கள் தான். நீங்கள் சொன்னதுபோல, இவர்கள் உங்கள் தற்போதையை மனைவியை தங்களின் மனைவி என்றுச் சொல்வார்கள், இது இவர்கள் மீதுள்ள குற்றமல்ல, இது தான் குளோனிங் முறை.

மனித குளோனிங் முறையினால் உண்டாகும் அனேக பிரச்சனைகளில் இது ஒரு பிரச்சனையாகும். இப்படி அனேக பிரச்சனைகள் நடைமுறையில் உண்டாகும். உங்கள் மீது எடுத்துக்காட்டு சொன்னதற்காக என்னை மன்னிக்கவும், ஆனால், உண்மை என்னவென்று உங்களுக்கு புரியவைக்கவேண்டும் என்பதால் இப்படிச் சொன்னேன்.

இப்படி சமுதாய சீர்கேடு விளைவிக்கும் ஒரு நவீன கண்டுபிடிப்பை  அல்லாஹ் அங்கீகரிப்பானா? இப்போது சொல்லுங்கள், இயேசுவின் பிறப்பு ஒரு அற்புதமா? அல்லது குளோனிங் முறை விஞ்ஞானமா?

[மறுபடியும் ஒரு சின்ன கேள்வி: உதாரணத்திற்கு உங்களைப்போல நான்கு பேரை குளோனிங் முறையில் உண்டாக்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். மறுமை நாளில் உங்களின் தற்போதைய மனைவி, யாருக்கு மனைவியாக இருப்பார்கள், அல்லாஹ் எந்த பீஜேவிற்கு அவரை மனைவியாக தருவார், கவனத்தில் வைத்திருக்கவும், மீதமுள்ள நான்கு பீஜேக்களும் நீங்களே, உங்கள் DNA தான் அவர்களும், எனவே நீங்கள் ஐந்து பேரும் வேறு வேறு நபர்கள் அல்ல, நீங்கள் ஐந்தில் ஒன்று Five in One]

முடிவுரை: அன்பான வாசகர்களே, இஸ்லாமையும், அதன் அறிவுஜீவிகளின் விளக்கங்களை கண்டீர்களா?  குர்-ஆனும் விஞ்ஞானமும் நடைமுறையில் எப்படி ஒன்றையொன்று முரண்படுகின்றது என்பதைக் கண்டீர்களா? 

அல்லாஹ் அற்புதம் செய்தான், இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசவைத்தான் என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, குளோனிங் முறைப் பற்றி குர்-ஆன்  சொல்கிறது, இயேசு அப்படித் தான் பிறந்தார் என்று பீஜே அவர்கள் அள்ளிவீசிய பொய் மூட்டைகள் அனைத்தையும் நான் அழித்துவிட்டேன்.

உண்மையாகவே, பீஜே அவர்களுக்கோ  அல்லது அவரது குழுவில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கோ, குறிப்பு 415ல் சொல்லப்பட்டது போல இயேசு குளோனிங் முறையில் பிறந்தார் என்ற நம்பிக்கை இருந்தால், இந்த கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும், பிரச்சனைகளுக்கும் பதிலைச் சொல்லுங்கள். உங்களால் முடியாவிட்டால், அவரது குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து அடுத்த முறை, 415வது குறைப்பை நீக்கிவிடுங்கள்.

மேலும், இயேசு அல்லாஹ்வின் DNA  என்று நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களானால், இது இஸ்லாமின் அடிப்படையை தகர்த்தெரிந்துவிடும் என்பதை கவனிக்கவும்.

கடைசியாக, பீஜே அவர்களே, உங்கள் விஞ்ஞானத்தை இன்னும் சோதிக்கப் போகிறேன்.  உங்களால் முடிந்தால், பதில்களை தயாராக வைத்துக்கொள்ளவும்.

உலகத்தின் ஞானிகளின் (தங்களை ஞானிகள் என்று எண்ணிக்கொள்பவர்களை) ஞானத்தை அடக்கும் படி, உலகத்தின் அஞ்ஞானிகளை (என்னைப்போல சாதாரண மனிதர்களை) பயன்படுத்தும் தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

அன்பான இயேசுவே,  உம்முடைய உலக வாழ்வு பற்றிய சத்தியங்களை அறியாமல், தங்கள் கற்பனைகளை உலக மக்களுக்கு போதிக்கும் பீஜே போன்றவர்களுக்கு அறிவைத் தாரும். உம்மைப் பற்றி வாய்க்கு வந்தபடி பேசும் பீஜே அவர்கள் சத்தியத்தை அறிந்துக்கொள்ளட்டும். அவரையும், அவரது போதனைகளையும் கண்மூடித்தனமாக பின் பற்றும் முஸ்லிம்கள், சத்தியத்தை அறிந்துக்கொள்ள அவர்களுக்கு கேட்கக்கூடிய காதுகளையும்,  காணக்கூடிய கண்களையும், உணர்ந்துகொள்ளக்கூடிய இருதயத்தையும் தாரும்.  முஸ்லிம்கள் விடுதலையடையட்டும், மெய்த்தேவனாகிய உம்மை அறிந்துக்கொள்ளட்டும். ஆமென்.

குர்-ஆன் பற்றிய கட்டுரைகள்

சமர்கண்ட் மூல குர்‍ஆன் (MSSவுடன்) இன்றைய குர்‍ஆன் (1924 எகிப்திய வெளியீடு) ஒப்பீடு 

மூலம்: http://isakoran.blogspot.in/2013/04/dna.html

பீஜே அவர்களுக்கு மறுப்புக்கள்