நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?

மனிதன் இயற்கையாகவே மதப்பற்று உடையவன் என்று நாம நம்புகிறோம், ஆனால், இந்திய மண்ணில் மதப்பற்றின் வாசனை கொஞ்சம் அதிகம் என்றே சொல்லலாம். 

இந்துக்களின் மனதை புண்படுத்திய நித்தியானந்தாவை கண்டித்த பீஜே அவர்கள், இந்த இறைத்தூதரின் செயலைக் கண்டு இஸ்லாமியர்களின் மனது புண்படவில்லை என்றுச் சொல்லத் தயாரா? அப்படி புண்படவில்லை என்று பீஜே கருதினால், அதனை விளக்குவாரா?

நம் நாட்டில் சாப்பாட்டிற்கு பஞ்சமுண்டு ஆனால் சாமியர்களுக்கு பஞ்சமில்லை. சமீப காலத்தில் நித்யானந்தா என்ற சாமியாரின் செயல்கள் பற்றி நாம் செய்தித்தாளில் படித்துள்ளோம். அவர் திருமண பந்தத்திற்கு வெளியே, தன்னை ஒரு மகான் என்று நம்பும் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டுள்ளார். 

விஷயத்திற்கு வருகிறேன், இஸ்லாமிய அறிஞர் பீஜே அவர்கள், நித்யானந்தாவிற்கு தமிழ் நாட்டு காவல் துறை "மரியாதை செய்ததையும், அவருக்கு ஆதரவாக பேசியதையும்" கண்டித்து கண்டணம் வெளியிட்டுள்ளார். இந்த கண்டனத்தை படிக்கும் போது, நல்ல வேலையை பீஜே செய்துள்ளார் என்று சொல்லத் தோன்றுகிறது. அதாவது, மக்கள் நல்லவர் என்று நம்பும் ஒருவர், இப்படி கீழ்தரமான செயல்கள் புரிந்துள்ளதை கண்டிப்பதும், அதற்கு ஆதரவு அளிப்பவர்களை கண்டிப்பதும் சமுதாயத்திற்கு தேவையான ஒன்று தான். இதில் எந்த‌ மாற்று க‌ருத்தும் இருக்க‌முடியாது. 

ஆனால், நித்யானந்தாவை பீஜே அளந்த அதே அளவுகோலை பயன்படுத்தி, இன்னொரு நபரையும் பீஜே அளந்து தன் கண்டனத்தை தெரிவிப்பாரா? 

சரி, அந்த இன்னொரு நபர் யார்? என்று கேட்கிறீரகளா? பொறுமையாக கீழே இருக்கும் விவரங்களை படிக்கவும், பிறகு உங்களுக்கே தெரியும் அந்த இன்னொரு நபர் யார் என்று? 

1) இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர், ஒருபெண்ணை அப்பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக ஒரு அறைக்குள் அடைத்து வைத்து, என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா என்று கேட்கிறார், அந்தப்பெண் நீ ஒரு இடையன் நான் ஒரு அரசி, உன்னை எப்படி திருமணம் செய்துக்கொள்வேன் என்று கேட்டு மறுக்கிறாள். இவருக்கு ஏற்கனவே அனேக மனைவிகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இறைத்தூதர் செய்தது சரியா தவறா என்று பீஜே அவர்கள் விளக்குவார்களா? 

புகாரி பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255 

அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார் 

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள். 

(மேற்கண்ட ஹதீஸ் பற்றிய அனைத்து கேள்விகளையும் படிக்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா? http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post.html)

2) நாம் கூறிய இந்த இறைத்தூதருக்கு ஒரு பெண்ணின் அழகை வர்ணித்துள்ளார்கள். அவளை அழைத்துக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அவரது அடியார்கள் அப்படியே செய்து முடித்தார்கள், அப்பெண்ணை கடத்திக்கொண்டு வந்து ஒரு அறையில் தங்க வைத்தனர். பிறகு, இந்த இறைத்தூதர் அப்பெண்ணிடம் என்னை திருமணம் செய்துக்கொள் என கூறினார்கள். உடனே, அப்பெண் இந்த மனிதரிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள இறைவனிடம் பாதுகாப்பு கோரினாள், இவரும் அப்பெண்ணை விட்டுவிட்டார். ஒரு இறைத்தூதர் பெண்களை கடத்திக்கொண்டு வந்து அறையில் தங்க வைத்துவிட்டு, பெண் கேட்பது தான் அழகா? 

இவரைப் பற்றியும், இந்த நிகழ்ச்சி பற்றியும், நம்முடைய பீஜே அவர்கள் என்ன விளக்கம் தமிழ் நாட்டு மக்களுக்கு தரப்போகிறார்கள்? 

புகாரி பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5637 

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார் 

நபி(ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து 'பனி சாஇதா' குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), 'இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்க, அவள் 'தெரியாது' என்று பதிலளித்தாள். மக்கள், 'இவர்கள் தாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண் 'அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவாதியாகி விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறினாள். …. 

(மேற்கண்ட ஹதீஸ் பற்றிய அனைத்து கேள்விகளையும் படிக்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்... http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post_18.html)

3) நம்முடைய கதா நாயகராகிய அந்த இறைத்தூதர் போர் புரிந்தார், ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டார், போரிலிருந்து நாடு திரும்பும் போது, அப்பெண்ணை கற்பழித்தார். இவர் இப்படி செய்துக்கொண்டு இருக்கும் போது, அவரது சிப்பாய் ஒருவர் கதவிடம் இரவெல்லாம் காவல் காத்துக்கொண்டு இருக்கிறார். காலை விடிந்தவுடன், முஹம்மது எழுந்து வெளியே வரும் போது, தன் சிப்பாயைக் கண்டு, கதவிடம் என்ன செய்கிறாய் என்றுகேட்டபோது, நீங்கள் உடலுறவு கொண்ட பெண்ணின் அப்பாவை நீங்கள் கொன்றீர்கள், கணவனை கொன்றீர்கள், அவளுக்கு திருமணம் சில நாட்களுக்கு முன்பாகத் தான் நடந்தது. ஆகையால், நீங்கள் அப்பெண்ணுடன் உடலுறவு (கற்பழிப்பு) கொள்ளும் போது, அவள் மூலமாக உங்களுக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்று பயந்து காவல் காத்தேன் என்றார். அந்த இறைத்தூதர் சபாஷ் என்றார். 

ஒரு பெண்ணின் அப்பாவை கொன்று, கணவனை கொலை செய்து, புதுமணப்பெண்ணை கற்பழிக்கும் ஒரு நபரை பீஜே கண்டிப்பாரா? அல்லது இந்த செயல் பற்றி பீஜே அவர்களின் கருத்து என்ன? 

அல் தபரி முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையிலிருந்து படியுங்கள். 

இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, "ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது "நல்லது" என்றார்

Ibn 'Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said "God is the Greatest." He had a sword with him; he said to the Prophet, "O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you." The Prophet laughed and said "Good". (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours) 

(மேற்கண்ட ஹதீஸ் பற்றிய அனைத்து கேள்விகளையும் படிக்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார். மூலம்: http://muhammadsunna.blogspot.com/2010/10/blog-post_29.html)

இந்துக்களின் மனதை புண்படுத்திய நித்தியானந்தாவை கண்டித்த பீஜே அவர்கள், இந்த இறைத்தூதரின் செயலைக் கண்டு இஸ்லாமியர்களின் மனது புண்படவில்லை என்றுச் சொல்லத் தயாரா? அப்படி புண்படவில்லை என்று பீஜே கருதினால், அதனை விளக்குவாரா? 

இந்த இறைத்தூதரை விட, நித்தியானந்தா நல்லவர் போல காணப்படுகிறார். எப்படியென்றால், நித்தியானந்தா யாரையும் கடத்திக்கொண்டு வந்து அறையில் அடைத்து சம்மந்தம் பேசவில்லை. அவர் பணம் கொடுத்து விபச்சாரம் செய்துள்ளார். 

நித்தியானந்தா போர் செய்து, ஒரு பெண்ணின் அப்பாவையும், கணவனையும் கொன்றுவிட்டு, அப்பெண்ணை கற்பழிக்கவில்லை, ஆனால் இந்த இறைத்தூதர் இப்படி செய்தார் என்று அவரது நூல்களே சாட்சி சொல்கின்றன. 

இப்படி எழுதுவதினால், நித்தியானந்தா செய்தது சரியானது என்று நாம் சொல்வதில்லை. அதற்கு பதிலாக மேற்கண்ட விதமாக நடந்துக்கொண்ட ஒரு நபரை இறைத்தூதர் என்று நம்பும் பீஜே அவர்கள் தங்கள் கண்களில் இருக்கும் துரும்பை பார்க்க தவறுவது ஏன் என்பது தான் கேள்வி. 

நித்தியானந்தா போன்ற நபர்களை ஆதரிப்பவர்களுக்கு பீஜே சூட்டிய புகழாறம்: 

"இத்தகைய கேவலமான போலிச்சாமியாருக்கு தமிழகக் காவல்துறை பட்டுக் கம்பளம் விரித்ததன் மூலம் தன்மீது தானே காரித்துப்பிக் கொண்டது "…. 

இது சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று நித்தியானந்தா கூறுவதை காவல் துறையினர் நம்பினால் அவர்கள் மாடுமேய்க்கத் தான் தகுதியானவர்களே தவிர காவல்பணிக்கு தகுதியானவர்கள் அல்ல. இது இந்து மதத்திற்கெதிரான தாக்குதல் என்று நித்தியானந்தா கூறுவதை காவல்துறை நம்பினால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது. 

மூலம்:  http://dubaitntj.blogspot.com/2011/07/tntj.html

நித்தியானந்தாவை விட அதிகபடியாக இன்னும் கேவலமான செயல்களை செய்த மேற்கண்ட மகானை பின்பற்றுபவர்களுக்கு யார் புகழாறம் சூட்டப்போகிறார்கள்? யார் கண்டிக்கப்போகிறார்கள்? 

போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நல்லவனாய் வாழ்ந்தவன் யாரடா?

மூலம்: http://isakoran.blogspot.in/2011/07/blog-post_3684.html

பீஜேவிற்கு அளித்த இதர மறுப்புக்கள்

உமரின் இதர கட்டுரைகள்