பெரும்பான்மையான கல்லறை தண்டனைகளுக்கு காரணம்: சிறுநீர் - ஆனால் முஹம்மதுவின் சிறுநீரை குடித்தால்...

இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது கூறினார்:

"கல்லறையின் பெரும்பாலான தண்டனைகள் சிறுநீர் காரணமாக கொடுக்கப்படுகின்றன‌" (நூல்: சுனன் இப்னு மாஜா ,1, 82)

கால்சட்டை, பைஜாமா அல்லது பேன்ட் கணுக்காலுக்கு மேலே இருக்க வேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டார். ஒருவேளை சிறுநீர் சொட்டுகள் ஆடைகளில் பட்டு, இதனால் அல்லாஹ்வினால் தண்டிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தினால், இந்த கட்டளையை அவர் கொடுத்து இருந்திருக்கலாம். ஒரு மனிதன் செய்யும் கற்பழிப்புக்கள், கொலைகள், படுகொலைகள் போன்ற தீயசெயல்களைக் காட்டிலும், சிறுநீர் ஆடைகளில் படுவது அதிக ஆபத்தை முஸ்லிம்களுக்கு கொடுக்கும் என்று முஹம்மது எண்ணியுள்ளார் போல தெரிகின்றது.

அமர் இப்னு அல்-அஸ் அறிவித்ததாவது: அப்துர்ரஹ்மான் இப்னு ஹஸனா அறிவித்தார்: நானும் அமர் இப்னு அல்-அஸும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர் ஒரு தோல் பையை கையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தார். அவர் அந்த தோல்பையினால் மூடிக்கொண்டு சிறுநீர் கழித்தார். பிறகு நாங்கள் சொன்னோம்: அவரைப் பாருங்கள். அவர் ஒரு பெண் செய்வது போல் சிறுநீர் கழிக்கிறார். நபி (ஸல்) அவர்கள் இதைக் கேட்டார்கள், மேலும் கூறினார்கள்: பனூ இஸ்ராயில் (யூதர்களில்) ஒருவருக்கு என்ன நேர்ந்தது என்று உங்களுக்குத் தெரியாதா? அவர்கள் மீது சிறுநீர் விழும்போது, சிறுநீர் விழுந்த இடத்தை அவர்கள் வெட்டிவிடுவார்கள்; ஆனால் அவர் (அந்த நபர்) அவர்களை (அவ்வாறு செய்ய) தடை செய்தார், மேலும் அவரது கல்லறையில் தண்டிக்கப்பட்டார். நூல்: சுனன் அபூதாவூத் எண்: 1:22 (Sunan Abu Dawud 1:22)

ஆயிஷா கூறினார்: "இறைத்தூதர் அவர்கள் நின்று கொண்டே சிறுநீர் கழிப்பார் என்று உங்களுக்கு யார் சொன்னாலும்; அவரை நம்பாதீர்கள். உட்கார்ந்துக்கொண்டு தான் அவர் சிறுநீர் கழிப்பார், நின்றுக்கொண்டு சிறுநீர் கழிக்க மாட்டார். [அவர் கூறினார்:] இந்த விவரமுள்ள ஹதீஸ்களை உமர், புறைதா, [மற்றும் அப்துர்-ரஹ்மான் பின் ஹசனா] ஆகியோரும் கூறியுள்ளார்கள். நூல்: திர்மிதி 21:245:1

ஹதீஸ் முஸ்லிம் 491.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு அடக்கத்தலங்களைக் கடந்துசென்றார்கள். அப்போது அறிந்துகொள்ளுங்கள்! (இதோ) இவர்கள் இருவரும் (சவக் குழிக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவரோ (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார். மற்றொருவரோ சிறுநீர் கழிக்கும்போது (தமது உடலை) மறைக்கமாட்டார் என்று கூறினார்கள். பிறகு பச்சை பேரீச்சமட்டை ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (சவக் குழி)மீது ஒரு துண்டையும் இவர் (சவக் குழி)மீது மற்றொரு துண்டையும் ஊன்றிவைத்தார்கள். பிறகு இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம் என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் மற்றொருவரோ சிறுநீர் கழித்துவிட்டுத் துப்புரவு செய்யமாட்டார் என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.

உலகின் மிக ஆபத்தான அசுத்தமாகிய‌ உங்கள் சிறுநீரில் இருந்து உங்களை எப்படி காப்பாற்றிக் கொள்ளப்போகிறீர்கள்?

இதற்கு ஒரு வழி இருக்கிறது. அதாவது இறைத்தூதர் முஹம்மதுவின் சிறுநீரை குடிக்கவேண்டும்!

இதற்கு ஒரு உதாரணத்தை ஹதீஸ்களிலிருந்து காண்போம். முஹம்மதுவின் ஆரம்பகால முஸ்லிம் சகோதரி ஒருவர் (பெண் தோழர்) ஒரு முறை முஹம்மதுவின் 'ஆசீர்வதிக்கப்பட்ட' சிறுநீரை தன்னை அறியாமல் குடித்துவிட்டார். இந்த செயல் 'நரக நெருப்பிலிருந்து அப்பெண் காப்பாற்றப்பட்டுவிட்டார்’ என்று கூறியுள்ளார் முஹம்மது.

உலக சரித்திரத்தில் எந்த ஒரு நபருக்கும் கொடுக்காத ஆசீர்வாதங்களை அல்லாஹ், நம்முடைய பிரியமான இறைத்தூதருக்கு கொடுத்திருந்தார். ஒரு முஸ்லிமல்லாதவர் இதனுடைய ஒரு சிறிய பகுதிய அறிந்தாலும் சரி, உடனே தான் பிடிவாதமாக பிடித்துக்கொண்டு இருக்கும் மார்க்கத்தை விட்டுவிட்டு, இஸ்லாமை முழு இருதயத்தோடு பின்பற்ற தொடங்கிவிடுவார். இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்: 

முஹம்மதுவின் ஆரம்பகால முஸ்லிம் சகோதரி ஒருவர் (பெண் தோழர்) ஒரு முறை முஹம்மதுவின் 'ஆசீர்வதிக்கப்பட்ட' சிறுநீரை தன்னை அறியாமல் குடித்துவிட்டார். இந்த செயல் 'நரக நெருப்பிலிருந்து அப்பெண் காப்பாற்றப்பட்டுவிட்டாராம்'.

இமாம் ஸுயுதி, ஆதார பூர்வமான ஹதீஸை தம்முடைய "al-Khasaa’is al-Kubra" என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். (Imam Suyyuti narrates an authentic report in his al-Khasaa’is al-Kubra, vol. 2, page 253 (published by Daar al-Kutub al-Arabiy — some other online editions have this narration in vol. 2, page 441): )

"நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் நம்முடைய நபியின் ஆசீர்வதிக்கப்பட்ட சிறுநீரை குடிப்பதன் மூலம் சொர்க்கத்தில் தங்களுடைய இடத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்தவர்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! உண்மையில் திருக்குர்ஆன் கூறுவது போல்: "அப்படியானால் உங்கள் இறைவனின் எந்த அருட்கொடைகளை நீங்கள் மறுப்பீர்கள்?" (ஸூரா அர்-ரஹ்மான்). எனவே சந்தேகத்திற்கு இடமின்றி எங்கள் உம்மா சில வருடங்களுக்கு முன்பு லண்டனிலிருந்து "சையித் முஹம்மது அல்-யாகூபியின்" கூற்றோடு முழு உடன்பாட்டில் உள்ளது.

“அவர் கூறியதாவது: "நான் எங்கள் நபி அவர்களிலிருந்து வெளிப்படும் அவரது சிறுநீராக இருக்க விரும்புகிறேன், அந்த சிறுநீர் தூய்மையானதும், நோய்களிலிருந்து குணப்படுத்துவதுமாக இருக்கிறது“.

முடிவுரையாக, இஸ்லாமிய அறிஞர், விரிவுரையாளர் இஸ்மாயீல் ஹக்கி அல்பருசி(Isma’eel Haqqi al-Barusi) அவர்கள் தம்முடைய "ரூ அல் பயான் - Rooh al-Bayan" என்ற குர்‍ஆன் விரிவுரையில் கூறிய வரிகளை இங்கு தருகிறேன்:

"இறைத்துதருடைய முடியானது சொர்க்கத்தின் தாவரங்களிலிருந்தும், அவரது உமிழ்நீர் சொர்க்கத்தின் தேனிலிருந்தும், அவரது சிறுநீர் நம்முடிய சில அறிஞர்கள் கூறியது போன்று, சொர்க்கத்தின் குடிநீராக உள்ளது"

His noble hair is from the vegetation of Paradise, his saliva is from the honey of Paradise, and His urine, as some of our wise men say, is the water of Paradise.”

இதனை அவர் யூதர்களின் கட்டுக்கதைகளிலிருந்து கற்றுக்கொண்டு, முஹம்மதுவிற்கு சம்மந்தப்படுத்தி பேசியுள்ளார்.

சுனன் அந்நிஸா எண் 1345:

ஆயிஷா கூறினார்: "ஒரு யூதப் பெண் என்னிடம் சொன்னதாவது: 'கல்லறையின் வேதனை சிறுநீர் காரணமாக இருக்கிறது.' நான் சொன்னேன்: 'நீங்கள் பொய் சொல்கிறீர்கள்.' அவள் சொன்னாள்: 'இல்லை, அது உண்மை; அதன் காரணமாக சிறுநீர் பட்ட எங்கள் தோலையும் உடைகளையும் வெட்டினோம். ’அல்லாஹ்வின் தூதர் (ﷺ) தொழுகை செய்ய வெளியே சென்றார், எங்கள் இருவரின் பேச்சுக்களின் குரல்கள் உரத்த சத்தத்தில் ஒலித்தன. இதனை கேட்டு இறைத்தூதர்: ‘இது என்ன? சத்தம் என்று கேட்டார்’ அதனால் அவள் சொன்னதை நான் அவரிடம் சொன்னேன். அவர் கூறினார்: 'அவள் உண்மையைப் பேசினாள்.' அந்த நாளுக்குப் பிறகு அவர் இப்படி வேண்டினார்: "ஜிப்ரீலின் மற்றும் மிகாவேலின் மற்றும் இஸ்ரஃபிலின் ஆண்டவனே (அல்லாஹ்வே), நெருப்பின் வெப்பம் மற்றும் கல்லறையின் வேதனையிலிருந்து எனக்கு அடைக்கலம் தருவாயாக'

இதுவரை சொன்னவைகள் முட்டாள்தனமானதாகவும், நான் இட்டுக்கட்டியதாகவும் நீங்கள் எண்ணினால், முஸ்லிம்கள் தங்கள் "இறைத்தூதரின் சிறுநீரை குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி எழுதியுள்ளவைகளை' இங்கு சொடுக்கி படித்து சரி பார்க்கவும்: Benefits Of Drinking The Blessed Urine Of Our Holy Prophet

அபு யாலா, ஹகீம், தர் க‌த்னி, தபரானி, அபூ நுய்ம் மூலமாக, உம்மு அய்மன் (பராக்கா என்றும் அழைக்கப்படுகிறார்) கூறினார் என்று "இமாம் ஜலால் ஸுயூதி" அறிவித்ததாவது: 'நபி அவர்கள் ஒரு நாள் இரவில் எழுந்தார், ஒரு கிண்ணத்தில் சிறுநீர் கழித்தார். அதே இரவில் எனக்கு தாகமாக இருந்ததால் நான் எழுந்தேன், அதனால் கிண்ணத்தில் இருந்ததை குடி நீர் என்று நினைத்து நான் குடித்தேன். காலையில் நான் என்ன செய்தேன் என்று அவரிடம் சொன்னேன், அவர் சிரித்துக்கொண்டே, ‘நிச்சயமாக உங்களுக்கு வயிற்றில் வலி இருக்காது’ என்றார். அபூ யாலாவின் வார்த்தைகள் பின்வருமாறு, 'இன்றைய நிலையில் நீங்கள் ஒருபோதும் வயிற்று வலியை உணர மாட்டீர்கள்' என்பதாக நபி கூறினார்.

முஹம்மதுவின் சிறுநீருக்கு இவ்வளவு முக்கியத்துவமா? சிந்தியுங்கள் முஸ்லிம்களே!

அதே நேரத்தில், சிறுநீர் சரீரத்தில் பட்டால், அதை கழுவாமல் விட்டால், கல்லறையில் அல்லாஹ் தண்டனையை கொடுப்பானா?

முஹம்மதுவின் சிறுநீர் பற்றிய முஸ்லிம்களின் ஆய்வுக் கட்டுரையை இங்கு படிக்கலாம்: http://scholarspen.blogspot.com/2005/05/prophets-urine_10.html 

தேதி: 14th Sep 2021

Source: Urine Trouble, Says Muhammad


ஃபெயித் ப்ரவுசர் (Faith Browser) கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்