புதிய ஃபத்வா: முஸ்லிம் பேனை கொல்லாதீர்கள், மீறினால் 50 சவுக்கடிகள் தண்டனை தரப்படும்

தற்கால உலக நடப்புக்களை படித்து, பார்த்து மக்கள் சோர்ந்துப் போய் உள்ளனர். செய்தித்தாளை பார்த்தால், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பொருளாதாரப் பிரச்சனை தலை காட்டுகிறது. இப்படி சோர்ந்துபோய் இருக்கும் மக்களை மகிழ்ச்சியாக்க, நாம் என்ன தான் முயற்சி எடுத்தாலும், அது முஸ்லிம்களின் முயற்சிக்கு ஈடு ஆகமுடியாது.

ஒவ்வொரு முறை ஒரு புதிய ஃபத்வாவை இஸ்லாமிய அறிஞர்கள் அறிமுகப்படுத்தும் போதும், உலக மக்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஒரு கணம் மறந்துவிட்டு, வாய்விட்டு சிரித்துவிடுகிறார்கள். 

ஒரு பக்கம் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததினால், அனுதினமும் பங்குச்சந்தைச் செய்திகளை படிக்கும் அனேகர் சிரித்து அனேக நாட்கள் ஆகிவிட்டது. இன்னொரு பக்கம் சிரியா நாட்டுக்குள் நடக்கும் சண்டைகள், அதன் மூலம பூதகாரமாக வெளிப்பட்ட உலக நாடுகளின் மத்தியில் நிலவும் கருத்து வேறுபாடுகள் நம்மை ஒவ்வொரு நாளும் வாட்டி வதைக்கின்றன. அடுத்து என்ன நடக்குமோ? என்று ஆச்சரியத்தோடு கேட்கும் கேள்விகள் ஏராளம். இதுமட்டுமா! இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? என்ற சந்தேகம் சமீபகாலமாக கிட்டத்தட்ட எல்லா மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இப்படியெல்லாம் நாட்டு நடப்பு இருப்பதினால், சிலர் செய்தித்தாள் பக்கம் தலைவைத்து படுக்கவும் பயப்படுகிறார்கள். இந்த சூழலில், நம்மை உண்மையாகவே வாய் விட்டு சிரிக்கவைக்க தகுதியானவர்கள் யார் என்று பார்த்தால், உலக இஸ்லாமிய அறிஞர்கள் ஆவார்கள்.

இதோ இந்த புதிய ஃபத்வாவினால் எப்படி இவர்கள் நம்மை குஷி படுத்துகிறார்கள் என்பதை பாருங்கள்.

இஸ்லாமிய பேன், பாக்கியமுள்ள தாடி:

சிரியாவில் உள்நாட்டு கலவரம் நடந்துக்கொண்டு இருக்கிறது என்பதை நாம் எல்லாரும் அறிவோம். இதில் ஈடுபட்டு இருக்கும் ஜிஹாதிக்களின் பிரச்சனையை தீர்க்க ஒரு ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் காரணமாக ஜிஹாதிக்கள் அனுதினமும் குளிக்க வாய்ப்பு கிடைப்பது இல்லை. இதன் காரணமாக அவர்களின் தாடியில் தூசி படிவதுண்டு, அது சுத்தம் செய்யப்படாமல் இருப்பதினால், சில நேரங்களில் அந்த தாடியில் "பேன்கள்" வளர வாய்ப்பு இருக்கிறது.

இப்படி முஸ்லிம்களின் தாடியில் பேன்கள் இருந்தால், அவைகளை கொல்லாதீர்கள், அவைகள் "முஸ்லிம் பேன்கள்" எனவே, அவைகளை கொல்லாதீர்கள் என்று பத்வா கொடுத்துள்ளார்கள். இந்த பத்வாவை மீறி, யாராவது பேன்களை கொன்றால், அவர்களுக்கு 50 சவுக்கு அடிகள் தண்டனை தரப்படும்.

இஸ்லாமிய அறிஞர்களின் புத்தம் புது ஃபத்வாக்கள், உலக மக்களை சிரிக்கவைக்கின்றன. இஸ்லாம் என்றாலே உலக மக்கள் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இஸ்லாமிய கோட்பாடுகளும், சட்டங்களும் தான், மேலும் இஸ்லாமிய அறிஞர்கள் கொடுக்கும் புதிய ஃபத்வாக்கள் வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கும்.

தற்கால உலக நடப்புக்களைக் கண்டு, சோர்வாக இருக்கும் மக்கள், அவ்வப்போது இஸ்லாமிய ஃபத்வாக்களை படித்து, தங்கள் சோர்வை போக்கிக்கொள்ளலாம்.

மூலம்: http://www.washingtontimes.com/news/2013/aug/26/free-syrian-army-fatwa-forbids-killing-believer-li/

Free Syrian Army fatwa forbids killing 'believer lice growing in blessed beards': report

பேன்களிலும் இஸ்லாமிய பேன், இஸ்லாமியரல்லாத பேன் என்று ஒன்று உண்டா?

இந்த ஃபத்வா முஹம்மதுவிற்கும் பொருந்துமா?

முஹம்மது தனக்கு பேன் பார்ப்பதற்கும், அவைகளை கொலை செய்வதற்கும் அனுமதியளித்துள்ளார். அப்படியானால், தன் தலையில் காணப்பட்ட பேன்கள், காஃபிர் பேன்களா?

புகாரி ஹதீஸ் தொகுப்பிலிருந்து சில பேன்களை பார்ப்போம்.

பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1814

கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார். 

"உம்முடைய (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?' என்று என்னிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் 'ஆம்! இறைத்தூதர் அவர்களே!" என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'உம்முடைய தலையை மழித்து மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவு அளிப்பீராக! அல்லது ஓர் ஆட்டை பலியிடுவீராக!" என்றார்கள்.

[இதே போல ஹதீஸ்கள் அனேகம் உண்டு.]

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2788

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம்(ரலி), உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படியே நபி(ஸல்) அவர்கள் தூங்கிவிட்டார்கள். . . .

முஸ்லிமாக மாறிய பேன்:

ஒரு ஹாஸ்டலில் ஒரு அறையில் மூன்று மாணவர்கள் தங்கியிருந்தார்கள். ஒருவன் முஸ்லிம், ஒருவன் கிறிஸ்தவன் இன்னொருவன் ஹிந்து. இவர்கள் ஒரே அறையில் படுத்துக்கொள்வார்கள். ஒரு நாள் கிறிஸ்தவன் தலையிலிருந்த பேன் ஒன்று இரவு நேரத்தில், முஸ்லிம் தலையில் ஏறிவிட்டது. அப்போது, முஸ்லிம் தலையில் இருந்த முஸ்லிம் பேன்கள், இந்த கிறிஸ்தவ பேனுக்கு இஸ்லாமை கற்றுக்கொடுத்தது. அதன் பிறகு, இந்த கிறிஸ்தவ பேன், ஒரு முஸ்லிம் பேனாக மாறிவிட்டது. இதே போல, ஒரு இந்து பேனும், முஸ்லிமின் தலையில் ஏறிவிட்டது, அதன் பிறகு முஸ்லிம் பேனாக மாறிவிட்டது. தன் பெயரையும் அப்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டது.

ஒவ்வொரு நாள் இரவிலும், இந்த பேன்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கிறிஸ்தவன் மற்றும் இந்துவின் தலையில் ஏறி, மற்றவர்களுக்கு தாவா (இஸ்லாமுக்கு அழைக்க) செய்ய ஆரம்பித்தது. ஆனால், இவர்களின் தாவா அழைப்புப்பணி பலன் அளிக்கவில்லை. வேறு எந்த பேனும் இவர்களோடு சேர விரும்பவில்லை. இதைக்கண்ட முஸ்லிம் பேன்கள் கோபமடைந்து, ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவ மற்றும் இந்து பேன்களை தாக்கவும், வன்முறையில் ஈடுபடவும், சண்டையிடமும் ஆரம்பித்தது. இப்படி சண்டையில் மரித்த பேன்களுக்கு சொர்க்கத்தில் அல்லாஹ் 72 பெண் பேன்களை தருவார். பேனுக்கே இப்படி அல்லாஹ் கொடுத்தால், உங்களுக்கு கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

ஒரு நாள் இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கண்ட விதமாக கதைச் சொல்ல ஆரம்பித்தால் கூட நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. பார்த்தீர்களாக, அந்த முஸ்லிம் பேன்கள் எப்படியெல்லாம் தாவா அழைப்புப்பணி செய்தது, அது போல நாமும் செய்யவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் பயான் செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஆனால், மேற்கண்ட கதையை கீழ்கண்டவிதமாக நான் முடிக்க விரும்புகிறேன்:

இந்த பேன்களின் அறிப்பை மற்றும் தொல்லையை தாங்க முடியாமல் அந்த மூன்று பேரும் ஒரு நாள் தலைச்சவரனிடம் சென்று முழுவதுமாக மொட்டையடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து நிம்மதியாக தூங்கினார்கள்.

பொதுவாக இஸ்லாமியர்களின் அறியாமையைக் கண்டு நான் துடிப்பேன், தவிப்பேன். முஸ்லிம்கள் அறிவுடையவர்களாக மாறினால் நன்றாக இருக்குமே என்று நினைப்பேன்.  ஆஹா எத்தனைப்பேன்! 

ஆக,  முஸ்லிம்கள் தங்கள் முஸ்லிம் பேன்களை கொல்லாமல் இருப்பது போல,  கிறிஸ்தவர்களும், இந்துக்களும் தங்கள் இனப்பேன்களை கொல்லாமல் இருப்பார்களாக.

மூலம்: http://isakoran.blogspot.in/2013/09/50.html

உமரின் இதர கட்டுரைகள்