சின்னஞ்சிறு கேள்விகள் - 540

 

சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் தொடர் கட்டுரைகளில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை மட்டுமே இங்கு தருகிறோம். 

  1. தலைப்பு: குர்‍ஆன் (110 கேள்வி பதில்கள்)
  2. தலைப்பு: பைபிள் (80 கேள்வி பதில்கள்)
  3. தலைப்பு: முஹம்மது (70 கேள்வி பதில்கள்)
  4. தலைப்பு: அல்லாஹ் – யெகோவா (30 கேள்வி பதில்கள்)
  5. தலைப்பு: கிறிஸ்தவம் (50 கேள்வி பதில்கள்)
  6. தலைப்பு: இஸ்லாமிய கலைச்சொற்கள்/அகராதி (60 கேள்வி பதில்கள்)
  7. தலைப்பு: இஸ்லாம் (60 கேள்வி பதில்கள்)
  8. தலைப்பு: ஹதீஸ்கள்/சீரா (30 கேள்வி பதில்கள்)
  9. தலைப்பு: பெண்கள் (30 கேள்வி பதில்கள்)
  10. தலைப்பு: எருசலேம் (20 கேள்வி பதில்கள்)

1. தலைப்பு: குர்‍ஆன் (110 கேள்வி பதில்கள்)

  1. கேள்வி 1: குர்‍ஆனின் மூல மொழி என்ன?
  2. கேள்வி 2: குர்‍ஆனில் எத்தனை அத்தியாயங்கள் மற்றும் வசனங்கள் உள்ளன?
  3. கேள்வி 3: ஸூரா மற்றும் ஆயத் என்றால் என்ன?
  4. கேள்வி 4: குர்‍ஆனில் 6666 வசனங்கள் உள்ளதாகச் சொல்கிறார்களே!
  5. கேள்வி 5: அது என்ன இன்றைய குர்‍ஆனில் 6236 என்றுச் சொல்கிறீர்கள், அப்படியானால், ஆரம்பகால  குர்‍ஆனில் 6236 வசனங்கள் இல்லையா?
  6. கேள்வி 6: குர்‍ஆனின் முதல் அத்தியாயத்தின் பெயர் என்ன?
  7. கேள்வி 7: குர்‍ஆனின் கடைசி அத்தியாயத்தின் பெயர் என்ன?
  8. கேள்வி 8: குர்‍ஆனின் மக்கீ, மதனீ வசனங்கள் என்றுச்  சொல்கிறார்களே, அவைகளின் அர்த்தமென்ன?
  9. கேள்வி 9: குர்‍ஆனில் குறிப்பிடப்படும் “ஜபூர், தோறா மற்றும் இன்ஜில்” என்ற பெயர்கள் எவைகளை குறிக்கின்றன?
  10. கேள்வி 10: குர்‍ஆன் மட்டும் போதாதா? ஹதீஸ்களும் தேவையா?
  11. கேள்வி 11: அரபிமொழி தெய்வ மொழியா?
  12. கேள்வி 12: குர்‍ஆன் என்ற வார்த்தையின் அர்த்தமென்ன?
  13. கேள்வி 13: முதன் முதலாக எந்த இரவில் குர்‍ஆன் இறக்கப்பட்டதாக கு‍ர்‍ஆன் சொல்கிறது?
  14. கேள்வி 14: குர்‍ஆனின் மிகவும் நீண்ட மற்றும் சிறிய அத்தியாயங்கள் எவை? 
  15. கேள்வி 15: மக்காவில் மற்றும் மதினாவில் இறக்கப்பட்ட அத்தியாயங்களின் (ஸூராக்களின்) எண்ணிக்கை எத்தனை?
  16. கேள்வி 16: குர்‍ஆனில் எந்த நபியின்(தீர்க்கதரிசியின்) பெயர் அதிகமாக வருகிறது?
  17. கேள்வி 17: குர்‍ஆனில் எத்தனை தீர்க்கதரிசிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன? 
  18. கேள்வி 18: குர்‍ஆன் வசனங்கள் அத்தியாயங்கள், முஹம்மதுவிற்கு இறக்கப்பட்ட வரிசையில் குர்‍ஆனில் அமைக்கப்பட்டுள்ளதா?
  19. கேள்வி 19: முஹம்மதுவின் காலத்தில் அனேகர் குர்‍ஆனை 100% முழுவதுமாக மனனம் செய்திருந்ததாகச் சொல்கிறார்களே இது சரியா?
  20. கேள்வி 20: முஹம்மதுவிற்கு இறக்கப்பட்ட குர்‍ஆன் வசனங்கள் எழுதப்பட்ட எலும்புகள், இலைகள், தோல்கள் இன்று நம்மிடம் உள்ளனவா?
  21. கேள்வி 21: குர்‍ஆன் தமிழாக்கங்கள் சிலவற்றை  இணையத்தில் படிக்கமுடியுமா?
  22. கேள்வி 22: குர்‍ஆனை அரபியில் படித்தால் தான் நன்மை என்றுச் சொல்வது சரியா?
  23. கேள்வி 23: முஹம்மது உயிரோடு இருந்த போது, அவரிடம் ஒரு புத்தக வடிவில் குர்‍ஆன் ஒரு தொகுப்பாக இருந்ததா?
  24. கேள்வி 24: குர்‍ஆனை முஹம்மது 100% முழுவதுமாக மனப்பாடம் செய்திருந்தாரா? அவர் ஒரு வசனத்தையும் மறக்கவில்லையா?
  25. கேள்வி 25: இஸ்லாமின் தூண்களில் ஒன்றான ஐந்து வேளை தொழுவது பற்றி குர்‍ஆனில் எந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது?
  26. கேள்வி 26: புனித ஹஜ் பயணத்தில் செய்யவேண்டிய கடமைகள் சட்டங்கள் பற்றி குர்‍ஆனில் எங்கு சொல்லப்பட்டுள்ளது?
  27. கேள்வி 27: குர்‍ஆனை புரிந்துக்கொள்வதற்கு தேவையான பின்னணியை எங்கு காணலாம்?
  28. கேள்வி 28: தௌஹீத் என்ற வார்த்தை குர்‍ஆனில் உள்ளதா?
  29. கேள்வி 29: குர்‍ஆன் மட்டும் (Quran Only Muslims) முஸ்லிம்கள் என்கிறார்களே! இவர்கள் யார்? 
  30. கேள்வி 30: குர்‍ஆனில் வரும் ஒரே பெண்ணின் பெயர் என்ன?
  31. கேள்வி 31: புதிய ஏற்பாட்டிற்கும் குர்‍ஆனுக்கும் இடையே எத்தனை ஆண்டுகள் இடைவெளி உள்ளது?
  32. கேள்வி 32: பைபிளில் வரும்  நபர்களின் பெயர்கள் குர்‍ஆனில் வேறு வகையாக உச்சரிக்கப்படுகிறது என்கிறார்களே, ஒரு பட்டியலைத் தரமுடியுமா?
  33. கேள்வி 33: முஹம்மதுவிற்கு விருத்தசேதனம்  (சுன்னத்து) செய்ததாக ஏதாவது குறிப்பு குர்‍ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ உள்ளதா?
  34. கேள்வி 34: நான் ஒரு தமிழ் குர்‍ஆனை வாக்கியுள்ளேன். அதனை படித்து இஸ்லாமை புரிந்துக்கொள்ள எத்தனை நாட்கள் தேவைப்படும்?
  35. கேள்வி 35: அல்லாஹ் முஹம்மதுவிற்கு முதன் முதலாக இறக்கியதாகச் சொல்லப்படும்  குர்‍ஆன் வசனங்கள் எவை?
  36. கேள்வி 36: குர்‍ஆனில் சில அத்தியாயங்களின் முதல் வசனத்தில் வார்த்தைகள் இல்லாமல், வெறும் சம்மந்தமில்லா எழுத்துக்கள் மட்டுமே உள்ளனவே, அவைகளுக்கு பொருள் உள்ளதா?
  37. கேள்வி 37: மஸீஹ் என்ற வார்த்தையின் பொருளை குர்‍ஆன் விளக்குகின்றதா?
  38. கேள்வி 38: குர்‍ஆனில் ஒருவரின் பெயர் அவரது தாயின் பெயரோடு பயன்படுத்தப்பட்டுள்ளது? அவர் யார்?
  39. கேள்வி 39: மகா அலேக்சாண்டர் (Alexander the Great) பற்றி குர்‍ஆனில் வசனங்கள் உண்டு என்றுச் சொல்கிறார்கள்! இது உண்மையா?
  40. கேள்வி 40: இரத்து (Arabic: Naskh, English: Abrogation) செய்வது என்றால் என்ன? 
  41. கேள்வி 41: குர்‍ஆனின் வசனங்களை குர்‍ஆனே இரத்து செய்யுமா?
  42. கேள்வி 42: ஒரே ஒரு மணி நேரத்தில் ஒரு குர்‍ஆன் வசனம் இரத்து செய்யப்பட்டது என்பது உண்மையா?
  43. கேள்வி 43: குர்‍ஆனை பைபிளோடு ஒப்பிடும் போது, வசனங்களின் எண்ணிக்கையில் குர்‍ஆன் பெரியதா? சிறியதா?
  44. கேள்வி 44: அரபி மொழி செமிட்டிக் மொழியா?
  45. கேள்வி 45: இஸ்லாமிய ஆட்சியாளராகிய மூன்றாவது கலீஃபா உஸ்மான் ஏன் குர்‍ஆனை எரித்தார்?
  46. கேள்வி 46: குர்‍ஆனை ஒரு புத்தகமாக தொகுக்கும் போது, அல்லாஹ் கொடுத்த பல வசனங்கள் கைவிடப்பட்டது என்ற கூற்று சரியா?
  47. கேள்வி 47: இப்னு மஸூத் என்ற முஹம்மதுவின் தோழர் தன் குர்‍ஆன் பிரதியை எரிக்க ஏன் அனுமதிக்க மறுத்தார்?
  48. கேள்வி 48: குர்‍ஆன் எழுதப்பட்ட காலத்தில் இருந்த அரபி எழுத்துக்களில் உயிரெழுத்து இல்லையென்பது சரியான கூற்றா?
  49. கேள்வி 49: இஸ்லாமிய விசுவாச அறிக்கையாகிய 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர்' இந்த வாக்கியம் எந்த குர்‍ஆன் வசனத்தில் உள்ளது?
  50. கேள்வி 50: இஸ்லாமிய  விசுவாச அறிக்கையை (ஷஹதா) குர்‍ஆனில் இல்லையென்றால், அதை ஏன் முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள்? 
  51. கேள்வி 51: குர்‍ஆன் தமிழாக்கங்களில் (இதர மொழியாக்கங்களிலும்) ஏன் பல வார்த்தைகளை அடைப்பிற்குள் எழுதுகிறார்கள்?
  52. கேள்வி 52: அல்லாவிற்கு 99 பெயர்கள் உள்ளன என்று குர்‍ஆன் சொல்கிறதா? 
  53. கேள்வி 53: குர்‍ஆனில் அல்லாஹ்வின் 99 பெயர்களில் வெறும் 81 பெயர்கள் மட்டுமே உள்ளன என்றுச் சொல்கிறார்களே, இது உண்மையா?
  54. கேள்வி 54: ஹூருல் ஈன் என்பவர்கள் யார்?
  55. கேள்வி 55: குர்‍ஆன் 47:19ஐ விளக்கமுடியுமா? இதில் அல்லாஹ் என்ன சொல்லவருகின்றான்?
  56. கேள்வி 56: முஹம்மது பாவமே செய்யாதவர் என்று சொல்கிறார்களே, இது உண்மையா?
  57. கேள்வி 57: எல்லா நபிமார்களும் பாவம் செய்யாதவர்கள் என்று தான் குர்‍ஆன் சொல்கிறதே!
  58. கேள்வி 58: மற்ற நபிமார்கள் பாவம் செய்தார்கள் என்று குர்‍ஆன் எங்கே சொல்கிறது?
  59. கேள்வி 59: குர்‍ஆனில் வசனங்கள் எழுத்துக்கு எழுத்து மாறாமல் உள்ளது என்பது உண்மையா?
  60. கேள்வி 60: குர்‍ஆனில் ஏதாவது ஒரு இடத்தில் இயேசு (ஈஸா) பாவம் செய்தார் என்று நேரடியாகவோ மறைமுகமாவோ சொல்லப்பட்டுள்ளதா?
  61. கேள்வி 61: மஸீஹ் என்ற வார்த்தை குர்‍ஆனில் எத்தனை முறை வருகிறது, அது யாரை குறிக்கிறது?
  62. கேள்வி 62: ஃபுர்க்கான் என்றால் குர்‍ஆனா? அல்லது முந்தைய வேதங்களா?
  63. கேள்வி 63: குர்‍ஆன் 3:4ன் படி, எது ஃபுர்க்கான்? குர்‍ஆனா? அல்லது முந்தைய வேதங்களா? ஏன் தமிழாக்கங்கள் குழப்புகின்றன?
  64. கேள்வி 64: பைபிளுக்கும் குர்‍ஆனுக்கும் இடையே இருக்கும் வேற்றுமைகளை பார்ப்பதை விட்டுவிட்டு, ஏன்  ஒற்றுமைகளை மட்டுமே பார்க்கக்கூடாது?
  65. கேள்வி 65: "குர்‍ஆனில் மக்கா நகரத்திற்கு கொடுக்கப்பட்ட இதர பெயர்கள் யாவை?
  66. கேள்வி 66: "குர்‍ஆனில் மக்கா என்ற வார்த்தை எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது?
  67. கேள்வி 67: "மதினா நகரத்திற்கு குர்‍ஆனில் பயன்படுத்தப்பட்ட வேறு பெயர் என்ன?
  68. கேள்வி 68: முஹம்மது அற்புதம் செய்யமாட்டார் என்று குர்‍ஆன் எங்கேயாவது சொல்கின்றதா?
  69. கேள்வி69: குர்‍ஆன் தான் முஹம்மதுவிற்கு கொடுக்கப்பட்ட அற்புதம் என்று குர்‍ஆன் எந்த வசனத்தில் சொல்கின்றது?
  70. கேள்வி 70: குர்ஆனை பொய்யாக்கும் ஹதீஸ்கள் – முஹம்மது அற்புதங்கள் செய்தாரா?
  71. கேள்வி 71: “குர்‍ஆனை படிக்கும் படி” என் நண்பன் வறுபுறுத்துகிறான். நான் குர்‍ஆனை படிக்கலாமா?
  72. கேள்வி 72: "குர்‍ஆனை தமிழில் படித்தீர்களா?" என்று முஸ்லிம் நண்பரிடம் கேட்டால், அவர்கள் கோபித்துக்கொள்ளமாட்டார்களா?
  73. கேள்வி 73: குர்‍ஆன் இயேசுவிற்கு எந்தெந்த (பட்டப்)பெயர்களைக் கொண்டு அழைக்கிறது? வசன எண்கள் என்ன?
  74. கேள்வி 74: இயேசு ஒரு நபி மட்டுமே என்று குர்‍ஆன் எங்கே சொல்கிறது? அதன் வசனம் என்ன?
  75. கேள்வி 75: குர்‍ஆனில் "ஹவாரிய்யூன்" என்ற வார்த்தை யாரை குறிக்கிறது?
  76. கேள்வி 76: இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பு பற்றி ஏதாவது குறிப்பு குர்‍ஆனில் உண்டா?
  77. கேள்வி 77: எந்த குர்‍ஆன் வசனத்தில் முஹம்மதுவின் பெயர் 'அஹமது' என்று வருகிறது?
  78. கேள்வி 78: உலகம் முழுவதும் ஒரே மூல அரபி குர்‍ஆன் உள்ளது என்கிறார்களே, இது உண்மையா?
  79. கேள்வி 79: ஹ‌ஃப்ஸ் குர்‍ஆன் மற்றும் வர்ஷ் குர்‍ஆன் என்றால் என்ன?
  80. கேள்வி 80: ஹஃப்ஸ் மற்றும் வர்ஷ் என்ற இரண்டு மூல அரபி குர்‍ஆன்கள் மட்டும் தான் உலகில் உள்ளன என்று நாம் கருதலாமா?
  81. கேள்வி 81: இந்த 20+ வகையான குர்‍ஆன்கள் வெறும் ஒலியாக இருக்கிறது, எழுத்தில் அதாவது பேப்பரில் அச்சில் (Print) செய்து புத்தகமாக இல்லையல்லவா?
  82. கேள்வி 82: ஒரு முஸ்லிமுக்கு 10 கிராத்களும் தேவையென்றால், அவர் அனைத்து குர்‍ஆன்களையும் வாங்கவேண்டுமா?
  83. கேள்வி 83: கிராத்துக்கள் என்றால் குர்‍ஆனின் வார்த்தைகளில் உள்ள ஓசையை நீட்டி குறைத்து வாசித்தல் என்பது தானே அர்த்தம், இதன் மூலம் வார்த்தைகளின் பொருள் மாறாது அல்லவா? அப்படியென்றால், வெறும் ஒரே குர்‍ஆன் தான் உள்ளது என்று தானே பொருள்?
  84. கேள்வி 84: குர்‍ஆன் 7 வட்டார மொழிகளில் இறங்கியது என்பதை ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன. எனவே பொருள் மாறாமல் வட்டார மொழியில் இருந்தால் என்ன பிரச்சனை?
  85. கேள்வி 85: கிராத் குர்‍ஆன்களில் எப்படிப்பட்ட வித்தியாசங்கள் காணப்படுகின்றன?
  86. கேள்வி 86: ஹஃப்ஸ் மற்றும் வர்ஷ் குர்‍ஆனில் உள்ள வார்த்தை வித்தியாசங்களில் சிலவற்றை இங்கு கொடுக்கமுடியுமா?
  87. கேள்வி 87: இப்படி அனேக குர்‍ஆன் கிராத் இருந்தால், அந்த கிராத்தில் உள்ள ஓதுதலை நாம் இன்று கேட்கமுடியுமா?
  88. கேள்வி 88: குர்‍ஆன் கிராத்துக்கள் 20க்கும் அதிகமாக இருக்கும் போது, ஏன் ஹஃப்ஸ் கிராத் மட்டும் உலகில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது (95% முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லப்படுகின்றது) ?
  89. கேள்வி 89: ஹஃப்ஸ் குர்‍ஆன் கிராத்துக்கு அடுத்தபடியாக, எது புகழ்பெற்ற கிராத்தாக முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள்?
  90. கேள்வி 90: குர்‍ஆனின் கிராத்தில் இத்தனை சிக்கல்கள், விவரங்கள் இருக்கும் போது, நம் தமிழ் நாட்டு அறிஞர்கள், இதைப் பற்றி முஸ்லிம்களுக்கு சொல்லிக்கொடுப்பதில்லையே! ஏன்?
  91. கேள்வி 91:  முஸ்லிம்களுக்கு நான்கு மனைவிகளை குர்‍ஆன் கட்டளையிட்டு, முஹம்மதுவிற்கு மட்டும் அனேக மனைவிகளை திருமணம் செய்ய அனுமதியளித்த‌துள்ளதாமே! இது உண்மையா?
  92. கேள்வி 92: குர்‍ஆன் 33:52ன் படி, முஹம்மது அனேக திருமணங்கள் செய்யக்கூடாது என்று கட்டளையுள்ளதே! இதன்படி முஹம்மது கூட நான்கு மனைவிகளை மட்டுமே திருமணம் செய்திருக்கவேண்டுமல்லவா?
  93. கேள்வி 93: குர்‍ஆனின் "முஹ்கமாத் என்றும் முதஷாபிஹாத்" வசனங்கள் என்றால் என்ன? 
  94. கேள்வி 94:  முஸ்லிம்களின் படி,  "குர்‍ஆனின் ஒரு குறிப்பிட்ட‌ அத்தியாயம், மொத்த குர்‍ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாக கருதப்படுகின்றது, அது எந்த அத்தியாயம்”?
  95. கேள்வி 95:   குர்‍ஆன் 112:1ல் வரும் "அஹத்" என்ற வார்த்தையின்படி, அல்லாஹ் ஒருவனல்ல, அவன் பலரில் (ஆயிரத்தில்) ஒருவன் என்று பொருள் வருகிறது என்கிறார்கள், இது உண்மையா? 
  96. கேள்வி 96: குர்‍ஆனில் முஹம்மதுவின் மருமகன் அலி அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சில முஸ்லிம் அறிஞர்கள் கூறுகிறார்களே, இது உண்மையா?
  97. கேள்வி 97: குர்‍ஆனில் முஹம்மதுவின் மருமகன் அலி அவர்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன என்பது உண்மையா?
  98. கேள்வி 98: குர்‍ஆன் சொல்லும் முபாஹலா என்ற சாபமிடும் நிகழ்ச்சி சரியானதா?
  99. கேள்வி 99: சாலொமோன் அரசரை ஜின்களோடு சம்மந்தப்படுத்தி குர்‍ஆன் பேசுகின்றதா?
  100. கேள்வி 100: எந்த‌ பழைய ஏற்பாட்டு நபரின் சரித்திரத்தை குர்‍ஆன் தொடர்ந்து விவரிக்கின்றது?
  101. கேள்வி 101: ஆயிஷா மற்றும் ஹஃப்ஸா அவர்களின் படி குர்‍ஆன் 2:238ம் வசனம் முழுமையானதல்ல என்பது உண்மையா?
  102. கேள்வி 102: சௌதி பிரிண்ட் செய்த குர்‍ஆனில், 2:238ம் வசனம் சரியாக ஆயிஷா அவர்களின் கூற்றுப்படி திருத்தப்பட்டுள்ளதே! அப்படியென்றால் சௌதி பிரிண்ட் செய்த குர்‍ஆனில் இவ்வசனம் பிழையற்றது என்று கூறலாமா? 
  103. கேள்வி 103: குர்‍ஆன் 1:4ல் வரும் "மாலிகி" என்ற வார்த்தைப் பற்றி பல முரண்பட்ட விவரங்கள் கேள்விப்படுகிறோமே!  இவ்வார்த்தையை அல்லாஹ் பல (‌20) வகைகளில் இறக்கினானா?
  104. கேள்வி 104: எல்லா நாடுகளுக்கும், எல்லா மக்கள் சமுதாயங்களுக்கும் அல்லாஹ் நபிகளை/தீர்க்கதரிசிகளை அனுப்பியதாக கூறப்படுகின்றதே! இது உண்மையா?
  105. கேள்வி 105: குர்-ஆன் முரண்பாடு - யோனா வெட்டவெளியில் எறியப்பட்டாரா(37:145)? (அ) எறியப்படவில்லையா(68:49)?
  106. கேள்வி 106: குர்‍ஆன்  அத்தியாயங்களின் பெயர்களை வகைப்படுத்தமுடியுமா?
  107. கேள்வி 107: குர்‍ஆன் அத்தியாயங்களை படிக்கும் போதே, அவைகள் மக்கீயா அல்லது மதனீயா என்று கண்பிடிக்க குறுக்குவழிகள் உண்டா?
  108. கேள்வி 108:  மக்கீ மதனீ அத்தியாயங்கள் உண்மையாகவே மக்காவிலும் மதினாவிலும் இறக்கப்பட்டவைகள் தானா? இதற்கு சான்றுகள் உண்டா?
  109. கேள்வி 109:  மக்காவிலும், மதினாவிலும் இறக்கப்பட்டதாக  ஏதாவது அத்தியாயம் உண்டா?
  110. கேள்வி 110:  குர்‍ஆனின் 12 அத்தியாயங்கள் பற்றி குழப்பம் உள்ளதென்றும், அவைகளை சிலர் மக்கீ என்றும், வேறு சிலர் மதனீ என்றும் கூறுகிறார்கள் என்கிறார்களே, அவைகள் என்னென்ன அத்தியாயங்கள்?

2. தலைப்பு: பைபிள் (80 கேள்வி பதில்கள்)

  1. கேள்வி 1: பைபிளுக்கு முன்பிலிருந்து குர்‍ஆன் இருக்கிறது என்று என் நண்பன் சொல்கிறான், இது உண்மையா?
  2. கேள்வி 2: பைபிளின் நபர்களின் பெயர்கள் குர்‍ஆனில் அத்தியாயங்களாக உள்ளனவா? அவை யாவை?
  3. கேள்வி 3: முஹம்மதுவின் காலத்தில் பைபிள் அரபி மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருந்ததா?
  4. கேள்வி 4: பைபிள் என்ற வார்த்தை பைபிளில் இல்லை என்று முஸ்லிம்கள் குற்றம் சாட்டுவது சரியா?
  5. கேள்வி 5: குர்‍ஆனில் பைபிளில் காணப்படும் அனேக  நிகழ்ச்சிகள் காணப்படுவது ஏன்?
  6. கேள்வி 6: முஹம்மதுவிடம் அரபி பைபிள் அல்லது பைபிளின் ஒரு  புத்தகம் இருந்ததா?
  7. கேள்வி 7: இயேசுவைப் பற்றி பைபிள் சொல்வதை நம்பவேண்டுமா? குர்‍ஆன் சொல்வதை நம்பவேண்டுமா?
  8. கேள்வி 8: குர்‍ஆனில் வரும் "இயேசு செய்த பறவைக்கு உயிர் கொடுக்கும் அற்புதம்" பைபிளில் இல்லையே! ஏன்?
  9. கேள்வி 9: பைபிளின் அரபி மொழியாக்கங்களில் யெகோவா தேவனுக்கு ஏன் அல்லாஹ் என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள்?
  10. கேள்வி 10: முஸ்லிம்கள் குர்‍ஆனை அதன் மூல மொழியில் படிப்பது போன்று, ஏன் கிறிஸ்தவர்கள் பைபிளை அதன் மூல மொழிகளாகிய‌ எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் படிப்பதில்லை?
  11. கேள்வி 11: குர்‍ஆனை அரபியில் படித்தால் அதிக நன்மையை அல்லாஹ் தருவதாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இதுபோலவே பைபிளை எபிரேய  கிரேக்க மொழிகளில் படித்தால், தேவன் நமக்கு அதிக நன்மைகளைத் தருவாரா?
  12. கேள்வி 12: பழைய ஏற்பாட்டை புதிய ஏற்பாடு இரத்துசெய்கிறது, அதுபோல புதிய ஏற்பாட்டை குர்‍ஆன் இரத்து செய்கிறது. எனவே, குர்‍ஆனைத் தான் கிறிஸ்தவர்கள் படிக்கவேண்டும் என்று என் நண்பர் சொல்கிறார். இதற்கு பதில் என்ன?
  13. கேள்வி 13: இயேசுவிற்கும் தனக்கும் (முஹம்மதுவிற்கும்) இடையே எந்த ஒரு தீர்க்கதரிசியும் எழும்பவில்லை என்று முஹம்மது கூறியுள்ளாரே! இது உண்மையா?
  14. கேள்வி 14: முஸ்லிம்கள் பைபிளை படித்தால் அல்லாஹ் கோபம் கொள்வானா?
  15. கேள்வி 15: முஸ்லிம்கள் குர்‍ஆனின் வசனங்களில் அடிக்கோடு இடுவது, பக்கங்களில் குறிப்பு எழுதுவது போன்று எதையும் செய்வதில்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் இதனைச் செய்கிறார்கள். இது தவறு தானே!
  16. கேள்வி 16: முஸ்லிம்கள் குர்‍ஆனை குளித்துவிட்டு, உளு செய்துவிட்டு தொடுகிறார்கள், படிக்கிறார்கள். இதே போல கிறிஸ்தவர்கள் குளித்துவிட்டு பைபிளை படிப்பதில்லை ஏன்? சுத்தமாக இருப்பதில் தவறேதுமில்லையே!
  17. கேள்வி 17: குர்‍ஆனை மூல மொழியாகிய அரபி மொழியில் மனப்பாடம் செய்வதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது, இது போல ஏன் கிறிஸ்தவம் ஊக்குவிப்பதில்லை?
  18. கேள்வி 18: இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முன்பு என்ன செய்தார்?
  19. கேள்வி 19: இயேசு அடிமைகளை வைத்திருந்தாரா?
  20. கேள்வி 20: ஆபிரகாம் மக்காவிற்குச் சென்று அங்கு காபாவை கட்டியதாக ஏதாவது குறிப்பு பைபிளில் உள்ளதா?
  21. கேள்வி 21: இஸ்மவேல் மக்காவில் சென்று வாழ்ந்தார் என்று இஸ்லாம் சொல்கிறது, பைபிள் இதைப் பற்றி என்ன சொல்கிறது?
  22. கேள்வி 22: பைபிளின் அனேக நிகழ்ச்சிகள் குர்‍ஆனில் வருவதினால், ஏன் நீங்கள் குர்‍ஆனை ஏற்பதில்லை?
  23. கேள்வி 23: பைபிள் மூல மொழிகளிலிருந்து வேறு மொழிகளுக்கு மொழியாக்கம் செய்தால், அது தன் தெய்வத்தன்மையை இழந்துவிடுகின்றதல்லவா?
  24. கேள்வி 24: "பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது” என்ற இஸ்லாமியர்கள் கூறுகிறார்களே!  இது உண்மையா?
  25. கேள்வி 25: இஸ்லாம் சொல்வது போன்று ஏன் கிறிஸ்தவர்கள் இயேசுவை ஒரு 'தீர்க்கதரிசி' என்று மட்டுமே பார்க்கக்கூடாது.
  26. கேள்வி 26: நான் ஒரு முஸ்லீம், பைபிளை படிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். எங்கேயிருந்து ஆரம்பிக்கட்டும், பழைய ஏற்பாடா அல்லது புதிய ஏற்பாடா?
  27. கேள்வி27: இயேசுவிற்கு இன்ஜில் கொடுக்கப்பட்டதென்று குர்‍ஆன் சொல்கிறது? அது ஒரு புத்தகம் தான், ஆனால் நீங்கள் ஏன் நான்கு நற்செய்திகளை வைத்திருக்கிறீர்கள்?
  28. கேள்வி 28: பைபிளில் இயேசு எங்கேயாவது தன்னை இறைவன் என்று சொன்னதுண்டா?
  29. கேள்வி 29: பைபிளில் ஏன் இயேசு பற்றிய அங்க அடையாளங்கள் சொல்லப்படவில்லை?
  30. கேள்வி 30: மத நல்லிணக்கத்திற்காக, குர்‍ஆனை உங்கள் ஞாயிறு ஆராதனையில் வாசிக்க அனுமதி கொடுப்பீர்களா?
  31. கேள்வி 31: நான் பைபிளை மூல மொழியில் படிக்காமல், தமிழில் படிப்பதினால் என் முஸ்லிம்கள் நண்பர் என்னை குற்றப்படுத்துகிறார். இதற்கு என்ன பதில் சொல்வது? 
  32. கேள்வி 32: பைபிள் விதியை ஆதரிக்கிறது என்று என் இஸ்லாமிய நண்பர் கூறுகிறார்? இது உண்மையா?
  33. கேள்வி 33: பைபிள் மறுமணத்தை ஆதரிக்கிறதா?
  34. கேள்வி 34: புதிய ஏற்பாட்டில் ஏன் பல புத்தகங்களுக்கு ஊர் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது?
  35. கேள்வி 35: முஹம்மது தம் வாழ்நாளில் ஒருமுறையாவது தௌராத்தை (தோரா, ஐந்தாகமங்களை) பார்த்திருக்கிறாரா?
  36. கேள்வி 36: முஹம்மது தம் வாழ்நாளில் ஒருமுறையாவது புதிய ஏற்பாட்டை  பார்த்திருக்கிறாரா?
  37. கேள்வி 37: இயேசுவிற்கு நீண்ட தலைமுடி உள்ளது போன்று வரைபடங்கள் மற்றும் இதர படங்களில் காட்டுகிறார்களே, இது உண்மையா?
  38. கேள்வி 38: ஆண் நபிகளை மட்டுமே அல்லாஹ் அனுப்பியதாக குர்‍ஆன் சொல்கிறது, ஆனால் பைபிளில் பெண் நபிகள் கூட இருப்பதாக கேள்விப்பட்டேன், இது எப்படி சாத்தியமாகும்?
  39. கேள்வி 39: பைபிளின் 400 அமைதி ஆண்டுகள் என்கிறார்களே, இது என்ன?
  40. கேள்வி 40: வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் புதிய ஏற்பாட்டில் இருப்பதினால் என்ன நன்மை?
  41. கேள்வி 41: ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிள்ளைகள் பிறக்காத போது, ஈசாக்குக்கு பிறகு எப்படி ஆபிரகாமுக்கு மட்டும் அனேக பிள்ளைகள் பிறந்தார்கள் (ஆதியாகமம் 16:1)?
  42. கேள்வி 42: ஆபிரகாம் ஆகாரோடு விபச்சாரம் புரிந்தாரா? (ஆதியாகமம் 16:1 - 4)?
  43. கேள்வி 43: முறையற்ற உடலுறவு பற்றி ஏன் பைபிள் பேசவேண்டும்? அதைப் பற்றி பேசாமல் அமைதியாக இருந்திருக்கலாம் அல்லவா? (பார்க்க லேவியராகமம்  18:8-18; 20:11-14; 17-21)
  44. கேள்வி 44: உடலில் பச்சை(tattoo) குத்திக்கொள்வதை இவ்வசனம் (லேவி 10:28) எதிர்க்கின்றதா?
  45. கேள்வி 45: இன்றைக்கும் எகிப்திலுள்ள காப்டிக் கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் சிலுவையை பச்சைக் குத்திக்கொள்கிறார்களே, இது தவறு என்று சொல்கிறீர்களா?
  46. கேள்வி 46: ஏன் அந்நியனுக்கும், யூதனுக்கும் ஒரே சட்டத்தை தேவன் கொடுத்தார்? (எண்ணாகமம் 15:14-16)?
  47. கேள்வி 47: கழுதை பேசுமா? இது வேடிக்கையாக இல்லையா? (எண்ணாகமம் 22:27-28)
  48. கேள்வி 48: பத்து கட்டளைகளில் கடைசி கட்டளையில் ஏன் மனைவிமார்கள் ஆண்களின் சொத்துக்கள் போன்று சொல்லப்பட்டுள்ளது, இது தவறு இல்லையா? (உபாகமம் 5:21)
  49. கேள்வி 49: உபாகமம் 33:2ல் சொல்லப்பட்டவர் முஹம்மது தானே! மக்காவை 10 ஆயிரம் இராணுவத்துடன் சென்று கைப்பற்றிய நிகழ்ச்சியைத் தானே இவ்வசனம் சொல்கிறது?
  50. கேள்வி 50: கர்த்தர் சாலொமோனின் அனேக மனைவிகள் பற்றி எச்சரிக்காமல், கடைசியாக அவர் வேறு தேவர்களை சேவித்ததைப் பற்றி மட்டும் ஏன் அக்கரை கொள்கிறார்? பார்க்க: 1 இராஜாக்க‌ள் 11:11 - 13.
  51. கேள்வி 51: உபாகமத்தில் தேவன் ஏன் ஒரு மனைவியை நேசித்து, இன்னொரு மனைவியை வெறுக்கச் சொல்கிறார்? இது நியாயமா?  (பார்க்க உபாகமம் 21:15)?
  52. கேள்வி 52: விக்கிரகங்களை செதுக்கி அவைகளை நமஸ்கரிக்கக்கூடாது என்று மோசேயின் சட்டத்தில் சொல்லியிருக்கும் போது, ஏன் சாலொமோன் கேருபீன்களை செதுக்கி தேவாலயத்தில் வைத்தார்? II நாளாகமம் 3:7
  53. கேள்வி 53: கேதுராள் என்ற பெண் ஆபிரகாமின் மனைவியா அல்லது மறுமனையாட்டியா(வைப்பாட்டியா)? 1 நாளாகமம் 1:32ல் மறுமனையாட்டி என்றும், ஆதியாகமம் 25:1ல் "மனைவி" என்றும் சொல்லப்பட்டுள்ளதே! ஏன் இந்த முரண்பாடு?
  54. கேள்வி 54: ஏன் பெண்கள் சுத்திகரிக்கப்படவேண்டும் என்று பைபிள் கூறுகிறது, அவர்கள் அழுக்காக இருக்கிறார்கள் என்று பொருளா? பார்க்க எஸ்தர் 2:9 -12.
  55. கேள்வி 55: சங்கீதம் 45:3-5 வசனங்கள் முஹம்மதுவை குறிக்கிறது என்று சில முஸ்லிம்கள் கூறுகிறார்கள், இது சரியா?
  56. கேள்வி 56: ஒரு முஸ்லிம் கேட்டார்: "ஒரு பெண் பெண்ணாக இருப்பதால், அவளை நரகத்தில் தள்ளுவது தேவனுக்கு தகுமோ"? பார்க்க‌ நீதிமொழிகள் 5:3-5. 
  57. கேள்வி 57: உன்னதப்பாட்டு 5:16ல் முஹம்மது பற்றி முன்னறிவிப்பு உண்டு முஸ்லிம்கள் சொல்கிறார்கள், இது உண்மையா?
  58. கேள்வி 58: தேவன் முடிதிருத்தம்(பார்பர்) செய்தார் என்று ஏசாயா 7:20 சொல்கிறதே! இது இறைத்தன்மைக்கு ஏற்றதா? 
  59. கேள்வி 59: தேவன் ஏன் ஏசாயா தீர்க்கதரிசியை நிர்வாணமாக உலாவச் சொன்னார்? (ஏசாயா 20:2-3).
  60. கேள்வி 60: ஏசாயா 21:13ல் வரும் "அரபியாவின் பாரம்" என்பது, முஹம்மது அரேபியாவில் தோன்றி  பாரப்பட்டு, அவர் உலகத்திற்கு கொடுத்த செய்தியைக் குறிக்கும் என்று முஸ்லிம்கள் சொல்வது சரியா?
  61. கேள்வி 61:  நீதிமொழிகள் 31:6,7ல், மதுபானத்தை குடிக்ககொடுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளதே இது நியாயமான கட்டளையா?
  62. கேள்வி 62: கர்த்தர் "கெர்ச்சிக்கிறார்" என்றுச் சொல்வது, இறைவனது இலக்கணத்துக்கு அடுக்குமா? பார்க்க: ஏசாயா 42:13 & எரேமியா 25:30
  63. கேள்வி 63: எரேமியா தன் தாயின் வயிற்றில் உருவாகுமுன்னே தீர்க்கதரியானார் என்று எரேமியா 1:5 சொல்கிறது, இது எப்படி சாத்தியமாகும்?
  64. கேள்வி 64:  தேவனுக்கு  எப்படி இரண்டு சேஷ்டபுத்திரர்கள் இருக்கமுடியும்? யாத் 4:22ன் படி யாக்கோபு, எரேமியா 31:9ன் படி எப்பிராயீம் சேஷ்ட புத்திரன்? இது முரண்பாடு அல்லவா?
  65. கேள்வி 65: ஏன் தேவன் ஓசியா என்ற தீர்க்கதரிசியை விபச்சாரம் செய்ய கட்டளையிட்டார் (ஓசியா 1:2-3)? ஒரு முஸ்லிம் இந்த கேள்வியை கேட்டார்.
  66. கேள்வி 66: முஹம்மது பற்றி ஆபகூக் 3:3 வசனம் முன்னறிவிக்கிறது என்கிறார்களே, இது உண்மையா?
  67. கேள்வி 67: பைபிளில் வரும பாரான் என்பது மக்கா என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள் (ஆபகூக் 3:3 & உபாகமம் 1:1)? இது சரியா?
  68. கேள்வி 68: அஹமத் தீதத் அவர்கள் கேட்ட கேள்வி: பரிசுத்த ஆவியை பெறுவதற்கு இயேசு 30 ஆண்டுகள் காத்திருந்தார் (மத்தேயு 3:16), ஆனால் யோவான் ஸ்நானகன் பிறந்ததிலிருந்தே பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருந்தார் (லூக்கா 1:15). “மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள்”, பரிசுத்த ஆவியானவரை மலிவுவிலை போன்று மிகவும் சுலபமாக பெற்றுக் கொள்கிறார்கள். இது வேடிக்கையாக உள்ளதல்லவா?
  69. கேள்வி 69: அமஹதியா முஸ்லிம்கள் 'இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துலகத்துக்கும் வந்த இரட்சகர்' என்று நிருபித்தால் $20,000 அமெரிக்க டாலர்கள் கொடுப்பதாக சவால் விட்டுள்ளார்களே, இதற்கு என்ன பதில்? மத்தேயு 10 5-6
  70. கேள்வி 70: ஏன் இயேசு யூத மத குருக்களை அதிகமாக தாக்கி பேசினார் (மத்தேயு 23:13-33; 21:45; 16:4) இந்த கேள்வியை அஹமத் தீதத் கேட்டார்.
  71. கேள்வி 71: இயேசு பழைய ஏற்பாட்டை அழிப்பதற்காக வரவில்லை என்று சொல்லியிருக்கும் போது (மத் 5:17), ஏன் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களைப் போன்று பழைய ஏற்பாட்டின் உணவு பற்றிய கட்டளைகளை (Old Testament dietary laws) பின்பற்றக்கூடாது?
  72. கேள்வி 72: ஒரு விலையுயர்ந்த வாசனை தையலத்தை ஒரு பெண் இயேசுவின் பாதங்களில் ஊற்றும் போது, அந்த வீண் செலவு வேண்டாம் என்று இயேசு தடுக்கவில்லை ஏன் (பார்க்க‌ மத்தேயு 26:7-11)? (இந்த கேள்வியை அஹமத் தீதத் கேட்டார்) 
  73. கேள்வி 73: சமாதான பிரபு என்று அழைக்கப்படும் இயேசு ஏன், பூமியில் சமாதானத்தை அல்ல, பிரிவினையை உண்டாக்க வந்தேன் என்று சொல்கிறார்? (லூக்கா 12:51) இந்த கேள்வியை அஹமத் தீதத் கேட்டார்.
  74. கேள்வி 74:  "மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை" என்று யோவான் 3:13 சொல்கிறது, அப்படியானால் எலியா மற்றும் ஏனோக்கு பற்றி என்ன? மேலும் பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் பரலோகத்திற்குச் செல்லவில்லையா? அவர்கள் பரலோகில் இல்லையா? (இந்த கேள்வியை அஹ்மத் தீதத் அவர்கள் கேட்டார்கள்).
  75. கேள்வி 75: இயேசு தெய்வமானால் அவர் ஏன் மற்றவர்களுக்காக அழுதார்? இறைவன் அழமுடியுமா? அவர் ஏன் தாகமாக இருந்தார்? உணவு உண்டார்? இறைவனுக்கு தாகமுண்டாகுமா? பார்க்க‌ யோவான் 11:35, 19:28. (இந்த கேள்வியை அஹமத் தீதத் அவர்கள் கேட்டார்கள்)
  76. கேள்வி 76: ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு (எபே 4:4) என்று பைபிள் சொல்லும் போது, ஏன் பல பெயர்களில் திருச்சபைகள் உருவாகியுள்ளன?
  77. கேள்வி 77: யாக்கோபு 1:13ன் படி தேவன் யாரையும் சோதிப்பதில்லை, ஆனால் வேறு சில வசனங்களில் தேவன் சோதித்தார் என்று வருகிறதே? ஏன் இந்த முரண்பாடு? இந்த கேள்வியை அஹமத் தீதத் என்பவர் கேட்டார்
  78. கேள்வி 78: இயேசு தம் தாயை "ஸ்திரியே" என்று ஏன் அழைத்தார், மேலும் விபச்சாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணையும் "ஸ்திரியே" என்று தான் இயேசு அழைத்தார், இது சரி தானா? பார்க்க யோவான் 2:4, 8:10. இந்த கேள்வியை அஹமத் தீதத் கேட்டார்
  79. கேள்வி 79:  ஒரு கிறிஸ்தவன் முஸ்லிமாக மாறி சில ஆண்டுகள் கழித்து, மறுபடியும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழுவது சாத்தியமா? இதற்கு பைபிளில் சான்றுகள் உண்டா?
  80. கேள்வி 80: ஒரு கிறிஸ்தவர் முஸ்லிமாக மாறிவிட்டால், அவரை திருச்சபையில் தேவனை ஆராதிக்க அனுமதிப்பீர்களா?

3. தலைப்பு: முஹம்மது (70 கேள்வி பதில்கள்)

  1. கேள்வி 1: முஸ்லிம்கள் முஹம்மதுவை வணங்குகிறார்களா?
  2. கேள்வி 2: முதல் 12 ஆண்டுகள் முஹம்மதுவும் முஸ்லிம்களும் எருசலேமை நோக்கியே தொழுதார்களா?
  3. கேள்வி 3: முஹம்மது ஆபிரகாமின் மகனாகிய இஸ்மாவேலின் சந்ததியா?
  4. கேள்வி 4: முஹம்மது அவர்கள் உயிரோடு இருக்கும் போது, ஹதீஸ்கள் எழுத்துவடிவில் கொண்டு வரப்பட்டதா?
  5. கேள்வி 5: முஹம்மதுவிற்கு எழுத படிக்க தெரியுமா?
  6. கேள்வி 6: முஹம்மதுவிற்கு ஒரு யூதப்பெண் விஷம் வைத்தை மாமிசத்தை கொடுத்தாளாமே! இது உண்மையா?
  7. கேள்வி 7: முஹம்மதுவின் மரணம் எதனால் உண்டானது? இயற்கையா? விஷமா? வியாதியா?
  8. கேள்வி8: எத்தனையாவது வயதில் முஹம்மது தன்னை நபி என்று பிரகடணப்படுத்தினார்?
  9. கேள்வி9: முஹம்மது எப்போது மரித்தார்?
  10. கேள்வி10: முஹம்மது எத்தனை யுத்தங்களில் பங்கு பெற்றார்?
  11. கேள்வி11: முஹம்மதுவின் தாய் தந்தை பெயர்கள் என்ன?
  12. கேள்வி 12: முஹம்மது பழைய ஏற்பாட்டையோ, புதிய ஏற்பாட்டையோ பார்த்திருக்கின்றாரா?
  13. கேள்வி 13: கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை நபி (தீர்க்கதரிசி) என்று நம்புகிறார்களா?
  14. கேள்வி 14: எழுத படிக்க தெரியாத ஒருவர் சிறப்பாக வியாபாரம் செய்யமுடியுமா? அப்படியானால், முஹம்மது எப்படி வியாபாரத்தை சிறப்பாகச் செய்தார்?
  15. கேள்வி 15: முஹம்மதுவின் பெயர் குர்‍ஆனில் எத்தனை முறை வருகிறது?
  16. கேள்வி 16: முஹம்மதுவை 100% முஸ்லிம்கள் பின்பற்ற முடியுமா?
  17. கேள்வி 17: முஹம்மதுவை 100% முஸ்லிம்கள் பின்பற்றும்படி குர்‍ஆன் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகின்றதா?
  18. கேள்வி 18: முஹம்மது மக்காவில் மதினாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
  19. கேள்வி19: முஹம்மது மது அருந்தினாரா?
  20. கேள்வி 20: முஹம்மதுவிற்கு மிகவும் பிரியமான மனைவி யார்?
  21. கேள்வி 21: முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் நபி என்று அடைமொழியோடு அழைக்கலாமா?
  22. கேள்வி 22: முஹம்மதுவின் பெயரை உச்சரிக்கும் போது ஏன் முஸ்லிம்கள் (ஸல்) அல்லது அவர் மீது சாந்தி உண்டாகட்டும் என்றுச் சொல்கிறார்கள்?
  23. கேள்வி 23: முஹம்மது ஒரு ஆன்மீகத்தலைவரா? அல்லது ஆட்சித்தலைவரா?
  24. கேள்வி 24: முஹம்மது மதினாவிற்கு உயிர் தப்பிச் சென்ற போது (ஹிஜ்ரத்), அவரோடு கூடச் சென்ற அவரது தோழர் யார்? 
  25. கேள்வி 25: எந்த குகையில் முஹம்மதுவிற்கு முதலாவது குர்‍ஆன் வசனம் இறங்கியதாக நம்பப்படுகின்றது?
  26. கேள்வி26: மக்காவில் இருந்த போது  முஹம்மது எத்தனை போர்களை புரிந்தார்?
  27. கேள்வி27: ஏன் அவர் மக்காவில் இருந்த போது எதிர்த்து சண்டையிடவில்லை? போரிடவில்லை?
  28. கேள்வி28: முஹம்மது தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொண்டார் என்கிறார்களே, இது உண்மையா?
  29. கேள்வி29: வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், என்று பைபிள் சொல்வது முஹம்மதுவிற்கு பொருந்துமா? 
  30. கேள்வி30: பைபிளின் படி முஹம்மது யார்?
  31. கேள்வி 31: எங்கள் நபி முஹம்மது அவர்கள் சொன்னவைகளில் உங்களுக்கு பிடித்தமான கட்டளைகளை மட்டும் நீங்கள் பின்பற்றலாமே! ஏன் அவரை முழுவதுமாக புறக்கணிக்கிறீர்கள்?
  32. கேள்வி 32: இஸ்லாமின் பெயரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை பார்த்து, இஸ்லாமை எடை போடாதீர்கள், முஹம்மதுவின் செயல்களைப் பார்த்து எடை போடுங்கள்.
  33. கேள்வி 33:  யூதர்கள் முஹம்மதுவை நபி (தீர்க்கதரிசி) என்று நம்புகிறார்களா?
  34. கேள்வி 34: முஹம்மதுவின் மனைவிகள் பெயர்கள் யாவை? முஹம்மது திருமணங்கள் செய்த போது அவரது வயது என்னவாக இருந்தது?
  35. கேள்வி 35: முஹம்மது செக்ஸ் அடிமைகள் (வைப்பாட்டிகள்) வைத்திருந்தாரா? எங்கள் நபி இப்படி செய்யமாட்டார்!
  36. கேள்வி 36: எத்தனை பெண்களோடு முஹம்மது திருமணம் ஒப்பந்தம் செய்துக்கொண்டு, பிறகு சில காரணங்களுக்காக ஒப்பந்தங்களை முறித்துப்போட்டார்?
  37. கேள்வி37: முஹம்மது திருமண ஒப்பந்தங்களை முறித்ததற்கு காரணங்கள் யாவை?
  38. கேள்வி 38:  ஒரு நாள் முஹம்மது  ஏழு வானங்களுக்கு மேலே சென்று வந்தார் என்று சொல்கிறார்களே! இது உண்மையா?
  39. கேள்வி 39:  முஹம்மது சொந்தமாக அடிமைகளை வைத்திருந்தாரா?
  40. கேள்வி 40: முஹம்மதுவிற்கு சொந்தமாக "ஆண் அடிமைகள்" இருந்ததில்லை. இதற்கு ஏதாவது சான்றை கொடுக்கமுடியுமா?
  41. கேள்வி 41: மஹ்ரன் என்ற ஆண் அடிமை யார்?  இவர் முஹம்மது மற்றும் சஹாபாக்கள் பற்றி என்ன கூறினார்?
  42. கேள்வி 42: முஹம்மதுவும், சஹாபாக்களும் அடிமைகளை சொந்தமாக வைத்திருந்தார்களா?
  43. கேள்வி43: முஹம்மதுவின் பிள்ளைகளின் பெயர்கள் யாவை?
  44. கேள்வி 44: ஒரு முஸ்லிம் 4 மனைவிகள் மட்டும் திருமணம் செய்யலாம் என்று குர்ஆன் சொல்லும் போது, ஏன் முஹம்மது மட்டும் 10க்கும் அதிகமாக திருமணங்கள் செய்தார்?
  45. கேள்வி 45: முஹம்மதுவின் இரண்டாவது மனைவி ஸௌதா, தன்னை முஹம்மது விவாகரத்து செய்துவிடுவார் என்று ஏன் பயந்தார்கள்?
  46. கேள்வி 46: முஹம்மது திருமணம் செய்துக்கொண்ட இரண்டு பெண்களின் தகப்பன்மார்கள் அவரது நெருங்கிய தோழராக இருந்தார்கள் அவ்விருவர் யார்?
  47. கேள்வி 47: மூன்றாவது மற்றும் நான்காவது கலிஃபாவிற்கும் முஹம்மதுவிற்கும் என்ன தொடர்பு?
  48. கேள்வி 48: மதினாவில் வாழ்ந்த போது  முஹம்மது எத்தனை போர்களை புரிந்தார்?
  49. கேள்வி 49:  முஹம்மது பற்றி ஸஹீஹ் ஹதீஸ்கள் சொல்வதை நம்பலாமா?
  50. கேள்வி 50: முஹம்மதுவின் பற்களில் ஒரு குறிப்பிட்ட‌ போரின் போது காயம்பட்டதாக சொல்லப்படுவது எந்த போரில்?
  51. கேள்வி 51: முஹம்மது எத்தனை ஹஜ் செய்தார்? எத்தனை உம்ரா செய்தார்?
  52. கேள்வி52: முஹம்மதுவை எங்கு அடக்கம் செய்தார்கள்?
  53. கேள்வி53: நபித்துவம் அடையாளமாக முஹம்மதுவிற்கு இருப்பது எது?
  54. கேள்வி 54: முஹம்மது தனக்கு தனிச்சலுகைகள் வேண்டுமென்று குர்‍ஆனில் வசனங்களை சுயமாக சொல்லியுள்ளாரா?
  55. கேள்வி55: முஹம்மது தம் முதல் மனைவி உயிரோடு இருந்த காலக்கட்டத்தில், வேறு எத்தனை பெண்களை திருமணம் செய்தார்?
  56. கேள்வி 56: முஹம்மதுவின் கடைசி ஆசை என்னவாக இருந்தது? அது நிறைவேறியதா? 
  57. கேள்வி57: அல்லாஹ்வை தொழுவது அல்லது முஹம்மதுவிற்கு பதில் சொல்வது எது முக்கியம்? அல்லாஹ்வா? அல்லது முஹம்மதுவா?
  58. கேள்வி 58: முஹம்மதுவின் பேரப்பிள்ளைகள் யார்?
  59. கேள்வி 59: முஹம்மதுவின் பேரன்களில் யார் 'இஸ்லாமிய அரசு தலைவராக (கலீஃபாவாக) பதவி வகித்தார்'?
  60. கேள்வி 60: ஓமன் நாட்டு அரசனுக்கு  முஹம்மது அனுப்பிய செய்தி என்ன? இஸ்லாமிய அழைப்பு எப்படி விடுக்கப்பட்டது?
  61. கேள்வி 61: மைக்கேல் ஹெச் ஹார்ட் (Michael H. Hart) என்பவர் யார்? அவரை ஏன் முஸ்லிம்கள் அதிகமாக கௌரவப்படுத்துகிறார்கள்?
  62. கேள்வி 62: முஹம்மதுவிற்கு முதலாவது இடத்தைக் கொடுத்தது சரிதானா? மைக்கேல் ஹார்ட் சொன்னது தன் சொந்த கருத்து தானே, இதை ஏன் முஸ்லிம்கள் பெரிது படுத்துகிறார்கள்?
  63. கேள்வி 63: ஹிட்லர், ஸ்டாலின் மற்றும் முஹம்மது: இவர்களில் முதலிடம் பெறும் கெட்டவர் யார்? என்ற புத்தகம் பற்றி முஸ்லிம்கள் என்ன சொல்வார்கள்?
  64. கேள்வி 64: யார் பெரியவர்? இயேசு? நெபோலியன்? முஹம்மது? ஷேக்ஸ்பியர் அல்லது அப்ரஹாம் லிங்கன்? இந்த புத்தகம் பற்றிய சிறு குறிப்பு?
  65. கேள்வி 65: முஹம்மதுவின் ஆக்கிரமிப்புக்கள், யுத்தங்கள் கருத்தில் கொள்ளப்பட்டது - இதனால் தான் அவருக்கு முதலிடம் - இப்படியா  மைக்கேல் எழுதினார்?
  66. கேள்வி 66: மைக்கேலின் நெத்தியடி வரிகள்: குர்‍ஆனின் ஆசிரியர் முஹம்மது தான். முஹம்மதுவின் வார்த்தைகள் தான் குர்‍ஆன். இதனையும் முஸ்லிம்கள் ஏற்பார்களா?
  67. கேள்வி 67: செங்கிஸ் கான் மற்றும் முஹம்மது சரியான ஒப்பீடா? மைக்கேலுக்கு ஒப்பிட யாருமே கிடைக்கவில்லையா? இருந்தாலும் முஹம்மதுவே இதிலும் முதலில் வந்தார்! 
  68. கேள்வி 68: முஹம்மதுவிற்கு முதலிடம் கொடுப்பதற்கு உதவியது எது? ஆன்மீக இஸ்லாமா? அல்லது அரசியல் இஸ்லாமா (Political Islam)?
  69. கேள்வி 69: முஹம்மது பலதெய்வ வழிபாடுகளைச் செய்தார், யூத கிறிஸ்தவர்களிடம் ஏக தெய்வம் பற்றி அறிந்துக்கொண்டார். இப்படி எழுதியது முஹம்மதுவிற்கு முதலிடம் கொடுத்த மைக்கேல் ஹெச் ஹார்ட். முஸ்லிம்கள் இதனை படிக்கவில்லையா? முஸ்லிம்கள் இதனை ஏற்பார்களா? 
  70. கேள்வி 70: முஹம்மது இயேசுவை விட பெரியவர், சிறந்தவர் என்று மைக்கேல் கூறவில்லை! இவரது பட்டியலில் கேடுகெட்ட தீயவர்களுக்கும் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறாரா?

4. தலைப்பு: அல்லாஹ் – யெகோவா (30 கேள்வி பதில்கள்)

  1. கேள்வி 1: அல்லாஹ் தான் யெகோவா என்றால், யெகோவா என்ற வார்த்தை ஏன் ஒருமுறை கூட குர்‍ஆனில் வருவதில்லை? 
  2. கேள்வி 2: அல்லாஹ்வும் யெகோவாவும் ஒருவரே என்றுச் சொன்னால், ஏன் அல்லாஹ் என்ற பெயரை அவன் ஒரு முறையும் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தவில்லை?
  3. கேள்வி 3: ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை பிதா/தகப்பன் என்று அழைத்து வேண்டுதல் செய்யமுடியுமா?
  4. கேள்வி 4: அல்லாஹ் ஜிப்ரீல் தூதன் மூலமாக மட்டுமே முஹம்மதுவிடம் பேசினான். பல தீர்க்கதரிசிகளோடு நேரடியாக பேசிய அல்லாஹ், ஏன் முஹம்மதுவிடம் ஒரே ஒரு முறை கூட நேரடியாக பேசவில்லை?
  5. கேள்வி 5: அல்லாஹ்விற்கு எத்தனை பெயர்களை குர்‍ஆன் வழிமொழிகின்றது? 
  6. கேள்வி 6: முஸ்லிம்கள் அல்லாஹ்வை ஏன் 'அவன் இவன்' என்று மரியாதை குறைவாக குறிப்பிடுகிறார்கள்?
  7. கேள்வி 7: அல்லாஹ்விற்கு உருவம் உண்டா? குர்‍ஆன் என்ன சொல்கிறது?
  8. கேள்வி 8: அல்லாஹ் என்ற தெய்வத்தை முஹம்மதுவிற்கு முன்பும் மக்கா மக்கள் வணங்கிக்கொண்டு இருந்தார்களா? அப்படியானால், எந்த வகையில் அவனை வணங்கினார்கள்?
  9. கேள்வி 9: அல்லாஹ்விற்கு முன்று பெண் பிள்ளைகள் இருந்ததாக, மக்கள் ஏன் கூறினார்கள்?
  10. கேள்வி 10: அல்லாஹ் என்ற பெயர் பைபிளில் உள்ளது என்கிறார்களே, இது உண்மையா?
  11. கேள்வி 11:  அல்லாஹ் என்ற பெயர் யெகோவாவிற்கு சூட்டப்படாமல் இருந்திருந்தாலும், குறைந்த பட்சம் "அல்லாஹ்" என்ற வார்த்தை பைபிளில் இருந்திருக்குமே?
  12. கேள்வி 12: அல்லாஹ் என்ற பெயர் அல் + இலா என்ற இரு சொற்களின் கூட்டா? அல்லது அது ஒரு தனிப்பெயரா?
  13. கேள்வி 13: குர்‍ஆனை படிப்பவர்களுக்கு ஏற்கனவே "அல்லாஹ்" என்றால் யார் என்று தெரிந்திருந்ததா?
  14. கேள்வி 14: யெகோவா தேவனை பிதா என்று அழைப்பது போன்று, அவரை தாய் (அம்மா) என்று அழைக்கலாமா?
  15. கேள்வி 15: ஒருவன் என் முகத்தை கண்டு உயிரோடு இருக்கக்கூடாது என்று தேவன் பைபிளில் ஒரு இடத்தில் சொல்லி, ஆனால், வேறு இடத்தில் மூஸாவோடு முகமுகமாய் பேசினார் என்று சொல்கிறாரே, இது முரண்பாடு அல்லவா?
  16. கேள்வி 16: குறுக்குவழி அல்லாஹ் - ரமளான் கடைசி 10 நாட்களில் அல்லாஹ் முஸ்லிம்களோடு ஆடும் சூதாட்டம் என்ன?
  17. கேள்வி 17: குர்‍ஆனில் என்னை "அல்லாஹ்" என்று அழையுங்கள் என்று அதன் இறைவன் சொல்கிறான், பைபிளில் என்னை 'யெகோவா' என்று அழையுங்கள் என்று அதன் இறைவன் சொல்கிறான்? யார் கேம் விளையாடுவது இங்கே?
  18. கேள்வி 18: தற்காலத்திலும் அல்லாஹ் அற்புதம் செய்கின்றானா? தக்காளியில், வானத்தில், மரங்களில் அற்புதம் செய்வது உண்மையா? 
  19. கேள்வி 19: அல்லாஹ் ஏன் இஸ்மாயீலையும் மக்காவையும் 2500 ஆண்டுகள் மறந்துவிட்டான்? 
  20. கேள்வி 20: பைபிளின் தேவன் பழைய ஏற்பாட்டை பாதுகாத்தார் என்று எப்படி நம்புவது?
  21. கேள்வி 21: ஏன் பைபிளின் தேவன் ‘லேவி’ என்ற ஒரு வம்சத்தை  தன் ஆலய பணிக்காக வைத்துக் கொண்டார்? அல்லாஹ் இது போல செய்யவில்லையே!
  22. கேள்வி 22: பைபிளின் தேவன் ஏன் இஸ்ரவேலை மட்டுமே நேசிக்கிறார்?
  23. கேள்வி 23: நீங்கள் என்னதான் சொன்னாலும் சரி, யூதர்களை தேவன் அதிகமாக ஆசீர்வதித்திருக்கிறார்? பழைய ஏற்பாட்டில் இதனை காணலாம்.
  24. கேள்வி 24: அல்லாஹ்விற்கு இருக்கும் 99 பெயர்களில் ஏன் "பிதா" என்ற பெயர் இல்லை?
  25. கேள்வி 25: அல்லாஹ் யாருக்கும் தகப்பன் ஆகமுடியாது, சரி ஒப்புக்கொள்கிறோம், ஆனால், ஏன் முஹம்மது யாருக்கும் தகப்பன் ஆகமுடியாது?
  26. கேள்வி 26: சொர்க்கம் போவதற்கு அல்லாஹ்வின் வழி என்ன? யெகோவாவின் வழி என்ன?
  27. கேள்வி 27: ஆதாமை வணங்கும்படி(ஸுஜூது) செய்யும் படி அல்லாஹ் இப்லீஷுக்கு கட்டளையிட்டானா?
  28. கேள்வி 28:  குர்‍ஆனில் எந்த வசனத்தில் அல்லாஹ் 'கத்னா, சுன்னத்து' செய்யவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான்?
  29. கேள்வி 29: அல்லாஹ்விற்கு ஒற்றைப்படை எண்கள் என்றால் பிடிக்குமா?
  30. கேள்வி 30: எல்லாவற்றிற்கும் முந்தியவனும், பிந்தியவனும் யார்? குர்‍ஆன் 57:3

5. தலைப்பு: கிறிஸ்தவம் (50 கேள்வி பதில்கள்)

  1. கேள்வி 1: "கிறிஸ்தவம்" - ஒரு வரியில் விளக்கமுடியுமா?
  2. கேள்வி 2: கிறிஸ்தவம் மேற்கத்திய மார்க்கம் (வெள்ளைக்காரனின் மதம்) என்றுச் சொல்வது சரியா?
  3. கேள்வி 3: கிறிஸ்தவர்கள் பாவம் செய்து பாதிரியார்களிடம் மன்னிப்பு கேட்டு, மறுபடியும் பாவம் செய்கிறார்களே, இது சரியா?
  4. கேள்வி 4: ரோமன் கத்தோலிக்க பெண்கள் பொட்டு வைக்கிறார்கள், மற்றவர்கள் வைப்பதில்லை, இது எதனால்?
  5. கேள்வி 5: கிறிஸ்தவர்கள் எத்தனை பண்டிகைகளை கொண்டாடும் படி பைபிள் சொல்கிறது?
  6. கேள்வி 6: அப்படியானால், ஏன் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ்ஸையும், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டரை கொண்டாடுகிறார்கள்?
  7. கேள்வி 7: முஸ்லிமாகிய நான், திடீரென்று ஒரு ஞாயிறு ஆராதனையில் பங்கு பெற வந்தால் அனுமதிப்பீர்களா?
  8. கேள்வி 8: முஸ்லிமாகிய எனக்கு, கர்த்தருடைய பந்தியில் (இரா போஜனம் ரொட்டி, திரட்சை ரசம்) பங்கு பெற அனுமதிப்பீர்களா?
  9. கேள்வி 9: திருச்சபையில் சிலுவையில் இயேசு தொங்குவது போன்று சிலை வைப்பது சரியா?
  10. கேள்வி 10: ஒருவர் கிறிஸ்துவை பின்பற்ற விரும்பினால், ஏன் அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள்?
  11. கேள்வி 11: முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பெயரில் அறுத்த (ஹலால்) கறியை கிறிஸ்தவர்கள் உண்ணலாமா?
  12. கேள்வி 12: மற்ற மதங்கள் தங்கள் மதங்களை பரப்பாத போது ஏன் கிறிஸ்தவர்கள் மட்டும் அதிகமாக பரப்புகிறார்கள்?
  13. கேள்வி 13: கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் ஏன் வெளிநாடுகளிலிருந்து அதிகமாக பணத்தை வாங்குகிறார்கள்? நீங்களே சொந்தமாக பணம் போட்டு ஊழியம் செய்யமுடியாதா?
  14. கேள்வி 14: கிறிஸ்தவ ஊழியர்களில் பெரும்பான்மையானவர்கள் பண விஷயத்தில் ஏமாற்றுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன், இது சரியா?
  15. கேள்வி 15: நான் ஒரு கிறிஸ்தவன், ரமளான் என்றால் இஸ்லாமியர்களின் பண்டிகை என்று எனக்குத் தெரியும், ஆனால் அதற்கு மேலாக ஒன்றும் தெரியாது. ரமளான் என்றால் என்ன? சிறிது விளக்கமுடியுமா?
  16. கேள்வி 16: கிறிஸ்தவர்களின் உபவாசம் தான் ரமளான் நோன்பா? இவ்விரண்டிற்கும் இடையே இருக்கும் வித்தியாங்கள் என்ன?
  17. கேள்வி 17: ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் செருப்பு அணிந்துக்கொண்டுச் சென்று தொழுதுக்கொள்வது, இறைவனை அவமானப்படுத்துவது ஆகாதா?
  18. கேள்வி 18: ஆலயங்களில் ஆண்களும் பெண்களும் அருகில் அமர்ந்துக்கொண்டு ஆராதனை/தொழுகை செய்வது சரியானச் செயலா? இப்படி செய்தால் ஆண்களில் மனதில் பாவமான ஆசைகள் வருமல்லவா?
  19. கேள்வி 19: கிறிஸ்தவர்கள் இன்னும் முந்தைய ஜாதிப்பெயர்களை வைத்திருப்பது ஏன்?
  20. கேள்வி 20: கிறிஸ்தவர்கள் ஏன் ஞாயிறு அன்று ஆராதனைச் செய்கிறார்கள்?
  21. கேள்வி 21: ஆரோக்கத்திற்காக கிறிஸ்தவர்கள் விருத்தசெதனம் செய்துக் கொள்ளலாமா?
  22. கேள்வி 22: கிறிஸ்தவத்தில் கண்திருஷ்டி உண்ட?
  23. கேள்வி 23: கிறிஸ்துவத்தில் விதி என்ற கோட்பாடு உண்டா?
  24. கேள்வி 24: கிறிஸ்தவர்கள் தேவனை தொழுதுக்கொள்ளும் போது ஏன் பாடல்கள் பாடுகிறார்கள், இசைக்கருவிகளை இசைக்கிறார்கள்? இதனை பைபிள் அனுமதிக்கிறதா?
  25. கேள்வி 25: ஒரு நல்ல கிறிஸ்தவ பாடகர், ஊழியர் திடீரென்று கள்ள உபதேசம் செய்கின்றவராக மாறிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம்? அவர் பாடலை நம் சபைகளில் பாடலாமா?
  26. கேள்வி 26: ஆங்கில பாணியில், பழமையான தமிழில் பாடப்பட்ட பழைய பாடல்கள் இன்று சபைக்குத் தேவையா?
  27. கேள்வி 27: அனேக பாடல்களை எழுதியவர், சபைகளில் அவரது பாடல்கள் பாடப்பட்டுக்கொண்டு இருந்தது. திடிரென்று ஒரு பகிரங்க பாவத்தில் விழுந்துவிட்டார் (விபச்சாரமோ, பண ஊழலோ, வேறு எதுவோ), அவரது சாட்சி கெட்டுவிட்டது, அதிலிருந்து அவர் மீளவில்லை. இவரது முந்தைய பாடல்களை ஆராதனைகளில் பாடலாமா?
  28. கேள்வி 28: சில பாடல் வரிகளில் தவறான உபதேசம் இருப்பதாக தோன்றுகிறது, அவைகளை சபையில் பாடலாமா?
  29. கேள்வி 29: தானியேல் எருசலேமுக்கு நேராக திரும்பி (கிப்லாவை நோக்கி) தேவனை தொழுதுக்கொண்டார். எருசலேமின் தேவாலம் நோக்கியே பழைய ஏற்பாட்டில் யூதர்கள் தொழுதுக்கொண்டார்கள். முஸ்லிம்களுக்கும் முதல் 12/13 ஆண்டுகளுக்கு மேலாக எருசலேமை நோக்கியே தொழுதுக்கொண்டார்கள். கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஏன் அது போல செய்வதில்லை.
  30. கேள்வி 30: முஸ்லிமள் தங்கள் நோன்பை முடித்துக்கொள்வதற்கு நாம் உதவி செய்யலாமா? உதாரணத்திற்கு, இந்த மாதத்தில் நோன்பாளிகளுக்காக மசூதிகளுக்கு திண்பண்டங்களை, பழங்களை வாங்கித் தரலாமா? 
  31. கேள்வி 31: இன்றைய எருசலேம், இஸ்ரேலின் தலைநகரமாக இருக்கவேண்டும் என்று கிறிஸ்தவர்கள் விரும்புகிறார்களா?
  32. கேள்வி 32: கிறிஸ்தவர்கள் ஏன் மேலை நாடு உடைகளை அணிகிறார்கள், ஏன் இந்திய உடைகளை அணிவதில்லை?
  33. கேள்வி 33: பழைய ஏற்பாட்டு நபர்கள் பலதார திருமணம் புரிந்திருப்பதினால், ஏன் கிறிஸ்தவர்களும் பலதார திருமணம் புரியக்கூடாது?
  34. கேள்வி 34: நான் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, குர்ஆனை படித்துக் கொண்டு இருந்தேன். இப்போது நான் பைபிளை படிப்பதினால், குர்ஆனை படிக்கக்கூடாதா? படித்தால் குற்றமாகுமா?
  35. கேள்வி 35: நான் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு, ஞானஸ்நானம் பெற்று சபைக்கு வந்துக்கொண்டு இருந்து, அதே நேரத்தில் மசூதியில் நமாஜூம் செய்தால், இதனால் ஏதாவது பாதிப்பு உண்டாகுமா?
  36. கேள்வி 36: உன் அயலானை நேசி என்று இயேசு கட்டளையிட்டுள்ளார். மத நல்லிணக்கத்திற்காக, என் சபையை முஸ்லிம்கள் தங்கள் இறைவனை தொழுது கொள்ள நான் ஏன் அனுமதிக்கக் கூடாது?
  37. கேள்வி 37: உன்னைப்போல உன் அயலானை நேசி என்று இயேசு கூறினாரே, இதன் அர்த்தமென்ன? நாம் மாற்றுமத நண்பர்களை அதாவது முஸ்லிம்களை, இந்துக்களை நேசிக்கக்கூடாதா?
  38. கேள்வி 38: இயற்கை சீற்றங்களின் காலங்களில் மாற்றுமத அன்பர்களுக்கு என் திருச்சபையை திறந்து அவர்கள் தங்க இடம் தரலாமா?
  39. கேள்வி 39: தேவையில் உள்ளவன் தங்குவதற்கு திருச்சபையை திறந்துக்கொடுத்து உதவிய நாம், ஏன் வெள்ளிக்கிழமை அன்று தன் இறைவனை அவன் தொழுதுக்கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது?
  40. கேள்வி 40: ஒருவேளை நம் சபையை முஸ்லிம்களுக்கு தொழுகைக்காக திறந்துவிட்டால் என்ன தீமை உண்டாகிவிடும்?
  41. கேள்வி 41: சில திருச்சபைகளில் மதநல்லிணக்கத்திற்காக பகவத் கீதை மற்றும் குர்‍ஆன் போன்ற புத்தகங்களில் சில வசனங்கள் படிக்கப்பட்டதாக கேள்விப்படுகிறோமே! இவைகள் சரியான செயல்களா?
  42. கேள்வி 42: இயேசுவைப்போன்று முஹம்மதுவும் ஒரு தீர்க்கதரிசி என்பதால், ஏன் கிறிஸ்தவர்கள் முஹம்மது நபியை பின்பற்றுவதில்லை?
  43. கேள்வி 43: சில கிறிஸ்தவர்கள் மருந்து எடுப்பதில்லையே? உடல் நலக்குறைவின் போது ஏன் மருத்துவரிடம் சென்று பார்த்துக்கொள்வதில்லை?
  44. கேள்வி 44: கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  45. கேள்வி 45: கிறிஸ்தவ தற்காப்பு ஊழியம் (Christian Apologetics) என்றால் என்ன?
  46. கேள்வி 46: மக்களை கட்டாயப்படுத்தி  ஏன் கிறிஸ்தவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்கக்கூடாது?
  47. கேள்வி 47: பைபிள் நிகழ்ச்சிகளை கார்ட்டூன் படங்களாகவோ அல்லது சாதாரண படங்களாக வரைந்து பயன்படுத்துவது தவறா?
  48. கேள்வி 48: பைபிளில் வரும் அந்நிய ஜனம்/ ஜாதி (Gentile) என்ற வார்த்தையைப் பற்றி சிறு விளக்கம் தரமுடியுமா?
  49. கேள்வி 49: கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்?
  50. கேள்வி 50: முன்னால்  ரோமன் கத்தோலிக்க போப் (John Pope II) அவர்கள், குர்‍ஆனுக்கு முத்தமிட்டுள்ளாரே, அவர் செய்தது தவறா?

6. தலைப்பு: இஸ்லாமிய கலைச்சொற்கள்/அகராதி (60 கேள்வி பதில்கள்)

  1. கேள்வி 1: அப்த் (ABD) என்றால் என்ன?
  2. கேள்வி 2: அபூ (ABU) என்றால் என்ன?
  3. கேள்வி 3: அல் (Al)
  4. கேள்வி 4: அல்ஹம்து லில்லாஹ்
  5. கேள்வி 5:  அல்பா (Alpha)
  6. கேள்வி 6: அல்லாஹு அக்பர்
  7. கேள்வி 7: அன்சார் (அன்ஸார் - ANSAR)
  8. கேள்வி 8: அஸர் (ASR)
  9. கேள்வி 9: அஸ்தக்பீர் அல்லாஹ் (Astaghfir Allah)
  10. கேள்வி 10: அஸ்ஸலாமு அலைக்கும் (ASSALAMU ALAIKUM)
  11. கேள்வி 11: ஆலிம் (ALIM)
  12. கேள்வி 12: இப்லிஷ் (சாத்தான், சைத்தான், ஷைத்தான்)
  13. கேள்வி 13: இமாம்
  14. கேள்வி 14: கலீஃபா (கலிஃபா)
  15. கேள்வி 15: குறைஷ் (குரைஷ் - ஒரு வம்சத்தின் பெயர்)
  16. கேள்வி 16: தபரி (Tabari)
  17. கேள்வி 17: நிம்ரோத்
  18. கேள்வி 18: நிய்யத் (நிய்யா)
  19. கேள்வி 19: மஹ்றம்
  20. கேள்வி 20: மஸீஹி
  21. கேள்வி 21: மாஷா அல்லாஹ்
  22. கேள்வி 22: முஹர்ரம் (முஹரம் – முஃகர்ரம்)
  23. கேள்வி 23: யாஜித் 1 (முதலாம் யாஜித், ஆட்சி காலம் 680-683)
  24. கேள்வி 24: ரஜப்
  25. கேள்வி 25: ரஜம் (Rajm) - கல்லெரிந்து கொல்லுதல்
  26. கேள்வி 26: ரஸூல் அல்லாஹ்
  27. கேள்வி 27: லைலத்துல் கத்ர்
  28. கேள்வி 28: லைலா - முஹம்மதுவிற்கும் லைலாவிற்கும் என்ன ச‌ம்மந்தம்?
  29. கேள்வி 29: ஜம் ஜம் கிணறு (தண்ணீர்) 
  30. கேள்வி 30: ஷியா
  31. கேள்வி 31: இஸ்லாமிய நாட்காட்டி(Islamic Calendar) என்றால் என்ன? அது எப்போது தொடங்கப்பட்டது?
  32. கேள்வி 32: ஜின்கள் என்றால் என்ன? இஸ்லாமுக்கும் ஜின்களுக்கும் என்ன சம்மந்தம்? ஜின்களில் நல்ல கெட்ட ஜின்கள் உள்ளனவா?
  33. கேள்வி 33: காஃபிர் (பன்மை காஃபிரூன்) என்றால் யார்?
  34. கேள்வி 34: வேதங்கள் கொடுக்கப்பட்டோர் (அஹல் அல்-கிதாப் - AHL AL-KITAB) என்றால் யார்?  
  35. கேள்வி 35: முஜாஹீர்கள் என்றால் யார்?
  36. கேள்வி 36: உம்ரா (Umra) என்றால் என்ன?
  37. கேள்வி 37: நபித்தோழர்கள்/சஹாபாக்கள் என்றால் யார்?
  38. கேள்வி 38: பனி/பனூ இஸ்ராயீல் (Bani Israel) என்றால் யார்?
  39. கேள்வி 39: குர்‍ஆனை மனனம் செய்தவர்களை என்னவென்று அழைப்பார்கள்?
  40. கேள்வி 40: ஈத் உல் ஃபித்ர்  (Eid-ul Fitr) என்றால் என்ன? Eid al-Fitr 
  41. கேள்வி 41: அதான் (அஜான், பாங்கு) என்றால் என்ன?
  42. கேள்வி 42: அமீனா (Aminah) என்ற  பெண்மணி யார்?
  43. கேள்வி 43: அர்ஷ் (Al-ʿArsh) என்பது என்ன?
  44. கேள்வி 44: அரஃபத் என்பது இடத்தின் பெயரா அல்லது மனிதர்களின் பெயரா?
  45. கேள்வி 45: ஷம்ஸ் என்ற அரபி வார்த்தையின் பொருள் என்ன?
  46. கேள்வி 46: இத்தா (Iddah) என்றால் என்ன?  ஏன் இஸ்லாமிய பெண்களுக்கு இத்தா நாட்கள் கொடுக்கப்படுகின்றன?
  47. கேள்வி 47: இஹ்ராம் என்றால் என்ன?
  48. கேள்வி 48: ஈத் அல்-அதா (Eid al-Adha) என்றால் என்ன?
  49. கேள்வி 49: குர்பானி (பலி) என்றால் என்ன?
  50. கேள்வி 50: ஈமான் (Faith) என்றால் என்ன?
  51. கேள்வி 51: இலா (ilah) என்றால் என்ன?
  52. கேள்வி 52: மன்னு, ஸல்வா என்றால் என்ன?
  53. கேள்வி 53: ஷிர்க் (SHIRK) என்றால் என்ன? 
  54. கேள்வி 54: ஹராம் (HARAM) என்றால் என்ன?
  55. கேள்வி 55: ஹலால் (HALAL) என்றால் என்ன?
  56. கேள்வி 56: உம்மா (Ummah) என்றால் என்ன?
  57. கேள்வி 57: கிப்லா (தொழும் திசை - Qibla) என்றால் என்ன?
  58. கேள்வி 58: ஜன்னாஹ் (Jannah) என்றால் என்ன?
  59. கேள்வி 59: ஜஹன்னம் (Jahannam) என்றால் என்ன?
  60. கேள்வி 60: ஷஹதா (Shahadah)  என்றால் என்ன?

7. தலைப்பு: இஸ்லாம் (60 கேள்வி பதில்கள்)

  1. கேள்வி 1:  முஸ்லிம் என்றால் யார்?
  2. கேள்வி 2: முஸ்லிம்கள், இஸ்லாமியர்கள் மற்றும் முஹம்மதியர்கள், வித்தியாசம் என்ன?
  3. கேள்வி 3: அரேபியர்கள் அனைவரும் முஸ்லிம்களா?
  4. கேள்வி 4: முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையேயுள்ள சம்மந்தம் என்ன?
  5. கேள்வி 5: இஸ்லாமுக்கும் யூத கிறிஸ்தவர்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறதே (ஆபிரகாம், இஸ்மாயீல், எருசலேம்...)? நீங்கள் இல்லை என்றுச் சொல்கிறீர்களே!
  6. கேள்வி 6: இஸ்லாமின் மூன்று புனித நகரங்கள் யாவை?
  7. கேள்வி 7: முஸ்லிம்கள் ஒரு நாளுக்கு எத்தனை முறை தொழுகிறார்கள்?
  8. கேள்வி 8: முஸ்லிம்களில் தினமும் மூன்று முறை மட்டும் தொழுபவர்கள் இருக்கிறார்களா?
  9. கேள்வி 9: இஸ்லாமின் படி அல்லாஹ்விற்காக கட்டப்பட்ட முதலாவது மஸ்ஜித்(மசூதி, வணக்கஸ்தலம்) எது?
  10. கேள்வி 10: காபாவை கட்டியது யார்?
  11. கேள்வி 11: காபா மற்றும் எருசலேம் ஆலயத்திற்கு இடையே 40 ஆண்டுகள் இடைவெளியா?
  12. கேள்வி 12: கிஸ்வாஹ் (Kiswah) என்றால் என்ன?
  13. கேள்வி 13: இந்துக்கள் கோயில்களையும், மரங்களையும் சுற்றி வருவது போன்று, முஸ்லிம்கள் ஏன் காபாவை சுற்றி வருகிறார்கள்?
  14. கேள்வி 14: காபாவின் உள்ளே என்ன இருக்கிறது?
  15. கேள்வி 15: ஒரு முஸ்லிம் ஐந்து வேளை தொழுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?
  16. கேள்வி 16: நாய் குறுக்கே வந்தால் தொழுகை முறிந்துவிடுமா? 
  17. கேள்வி 17: முஸ்லிம் ஆண்கள் 4 திருமணங்கள் வரை செய்துக்கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கும் குர்ஆன் வசனம் எது?
  18. கேள்வி 18: நாங்கள் இயேசுவை நம்புகிறோம், நேசிக்கிறோம் என்று முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களிடம் சொல்கிறார்களே! இதனை கிறிஸ்தவர்கள் எப்படி எடுத்துக்கொள்வது?
  19. கேள்வி 19: முஸ்லிம்கள் தாடியை வைத்து மீசையை எடுக்கிறார்களே! இதன் பின்னணி என்ன?
  20. கேள்வி 20: சில இஸ்லாமிய அறிஞர்கள் ஏன் ப‌ல ஹதீஸ்களை புறக்கணிக்கிறார்கள்?
  21. கேள்வி 21: ஹதீஸ்கள் இல்லாமல் போனால், இஸ்லாமின் நிலை என்ன? இதனால் அதிக பாதிப்பு உண்டா?
  22. கேள்வி 22: ஏன் எல்லா ஹதீஸ்களையும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது?
  23. கேள்வி 23: ஷரியா என்றால் என்ன?
  24. கேள்வி 24: "வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, இமாம் செய்யும் பிரசங்கத்திற்கு என்ன பெயர்? 
  25. கேள்வி 25: ஜம் ஜம் கிணறு (தண்ணீர்) எங்கு இருக்கிறது
  26. கேள்வி 26: ஆரம்பத்தில் முஸ்லிம்கள் 50 முறை தொழுதுக்கொண்டு இருந்தார்களா?
  27. கேள்வி 27: முஸ்லிம்களின் அன்னைகள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
  28. கேள்வி 28: இஸ்லாம் ஒரு நாள் உலகை ஆளும் என்று அடிக்கடி முஸ்லிம்கள் சொல்வதை கேட்கமுடிகின்றது இது உண்மையா?
  29. கேள்வி 29: முஸ்லிம்களும் இயேசுவை நம்புவதினால், அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கவேண்டியதில்லை அல்லவா?
  30. கேள்வி 30: உலகிலேயே முஹம்மது தான் மிகவும் நல்லவர் என்று என் முஸ்லிம் நண்பர் சொல்கிறார், இது உண்மையா?
  31. கேள்வி 31: இஸ்லாமில் கண் திருஷ்டி உண்டா?
  32. கேள்வி 32: இஸ்லாமில் மூடப்பழக்கங்கள்/ மூடநம்பிக்கைகள் உண்டா? 
  33. கேள்வி 33: முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களை வெறுக்க முக்கியமான காரணமென்ன?
  34. கேள்வி 34: பலதார திருமணத்தால் நன்மை அதிகமா? தீமை அதிகமா?
  35. கேள்வி 35: மற்ற உலக மதங்களைப் போன்று இஸ்லாமும் ஒரு மதமா? அல்லது இஸ்லாம் வித்தியாசமானதா?
  36. கேள்வி 36: உலக நாடுகள் அனைத்தையும் ஒரே ஆளுகையின் கீழ்கொண்டுவரவேண்டும் என்ற இஸ்லாமிய கோட்பாடு நல்லது தானே! இதில் என்ன தீமை இருக்கிறது?
  37. கேள்வி 37: இஸ்லாமில் நல்ல கட்டளைகள் இல்லையா? இஸ்லாமில் ஆன்மீகம் இல்லையா? ஏன் தீயவைகளை மட்டுமே பார்க்கிறீர்கள்?
  38. கேள்வி 38: முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒரே இலக்கை நோக்கிச் செல்பவர்கள் அல்லவா? செல்லும் வழி தான் வித்தியாசமானது என்று நான் சொல்கிறேன், உங்கள் கருத்து என்ன??
  39. கேள்வி 39: உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே சஹாபாக்கள் கொலை செய்தார்களா? இது நம்பும்படி இல்லையே!
  40. கேள்வி 40: முஸ்லிம்கள் இந்த கேள்விகளை தங்களுக்கு தாங்களே கேட்டுப்பார்த்து பதில்களை கண்டுபிடிப்பார்களா?
  41. கேள்வி 41: உலக நாடுகள் ஏன் அடிக்கடி இஸ்லாமோடு மோதுகின்றன‌? இஸ்லாமை விமர்சிக்கின்றன?
  42. கேள்வி 42: பிரான்ஸும் முஹம்மதுவின் கார்ட்டூனும் – “அக்டோபர் 2020” 
  43. கேள்வி 43: இஸ்லாம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதென்று முஸ்லிம்கள் ஏன் நம்புகிறார்கள்? 
  44. கேள்வி 44: இஸ்லாம் என்றால் அமைதி என்று அர்த்தம், இப்படி இருக்கும்  போது, இஸ்லாம் எப்படி வன்முறையைத் தூண்டும்?
  45. கேள்வி 45: இதர  மதங்களைப் போல இஸ்லாம் ஒரு மதம் தானே, அதற்குரிய மரியாதையை உலகம் ஏன் அதற்கு கொடுப்பதில்லை?
  46. கேள்வி 46:  இஸ்லாமை சீர்திருத்த முடியாது, அதனால் தான் உலகம் அதனை தொடர்ச்சியாக விமர்சித்துக்கொண்டு இருக்கிறது. இந்த கருத்து சரியானதா?
  47. கேள்வி 47: பெரும்பான்மை முஸ்லிம்கள் நல்லவர்களாக இருப்பதினால், இஸ்லாமை விமர்சிக்காமல் இருக்கமுடியுமா?
  48. கேள்வி 48: முதலாவதாக‌ இஸ்லாமை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் யாருக்கு அதிக உரிமை உள்ளது? 
  49. கேள்வி 49: இஸ்லாமை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் கிறிஸ்தவர்களுக்கு (யூதர்களுக்கும்) உரிமை உள்ளதா? 
  50. கேள்வி 50: இஸ்லாமை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் மற்றவர்களுக்கு (முக்கியமாக இந்தியாவில் இந்துக்களுக்கு)   உரிமை உள்ளதா?
  51. கேள்வி 51:  பொதுவான கேள்வி : விமர்சிப்பது சரியா தவறா?
  52. கேள்வி 52: இஸ்லாமை விமர்சிக்கவேண்டாம் என்ற முஸ்லிம்களின் வாதத்தில் உண்மையிருக்கிறதா?
  53. கேள்வி 53: முஹம்மது மக்காவின் தெய்வங்களை அவமானப்படுத்தவில்லையா? விமர்சிக்கவில்லையா? 
  54. கேள்வி 54:  இன்று முஹம்மதுவின் கார்ட்டூனை காட்டியதால் கொலை செய்யப்பட்டது சரியென்றால், அன்று மக்காவின் மக்களை முஹம்மதுவை கொலை செய்ய முயற்சித்தது சரையானது என்று முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா?
  55. கேள்வி 55: குர்‍ஆனின் 98:6ல், யூத கிறிஸ்தவர்களை கேவலமாக விமர்சித்ததால், யாருடையை கழுத்தை வெட்டலாம்?
  56. கேள்வி 56: இயேசுவின் கார்ட்டூன்களை கிறிஸ்தவர்கள் எப்படி பார்க்கிறார்கள்? கிறிஸ்தவம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா?
  57. கேள்வி 57: விமர்சனங்களை இயேசுவும் முஹம்மதுவும் எப்படி கையாண்டார்க‌ள்? 
  58. கேள்வி 58:  லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒடுக்கப்படும் போது, பட்டினியால் சாகும் போது "எதிர்வினை" காட்டாத முஸ்லிம்கள், ஒரு முஹம்மதுவின் கார்ட்டூனுக்கு மட்டும் ஏன் இந்த "எதிர்வினை", இது நியாயமா?
  59. கேள்வி 59: அறியாமலும் நீ முஹம்மதுவை விமர்சிக்கக்கூடாது? 
  60. கேள்வி 60: உலக நாடுகளில் இஸ்லாமியர்கள் அமைதியாக வாழவேண்டுமென்றால், முஸ்லிம்கள் என்ன செய்யவேண்டும்?

8. தலைப்பு: ஹதீஸ்கள்/சீரா (30 கேள்வி பதில்கள்)

  1. கேள்வி 1: ஹதீஸ்கள் என்றால் என்ன?
  2. கேள்வி 2: ஹதீஸ்கள் கூட அல்லாஹ்வின் வஹியா?
  3. கேள்வி 3: ஹதிஸ்கள் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டுள்ளதா?
  4. கேள்வி 4: ஹதிஸ்கள் அல்லாஹ்வினால் பாதுகாக்கப்படவில்லையென்றால், அது அல்லாஹ்வின் வஹி இல்லையா?
  5. கேள்வி 5: எத்தனை ஹதீஸ்கள் ஆரம்பத்தில் தொகுக்கப்பட்டன, அவைகளில் எத்தனை உண்மையென ஒப்புக்கொள்ளப்பட்டன.
  6. கேள்வி 6: ஹதீஸ்களில்  பலவீனமான, உண்மையான ஹதீஸ்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே? உண்மையா?
  7. கேள்வி 7: இஸ்னத்(Isnad/Sanad - சங்கிலித்தொடர்) என்றால் என்ன? 
  8. கேள்வி 8: ஒரே நிகழ்ச்சி அல்லது விவரம் பல ஹதீஸ்களில் வருவது ஏன்?
  9. கேள்வி 9: குர்‍ஆனில் சொல்லப்பட்டவைகளோடு ஹதிஸ்கள் முரண்படுமா?
  10. கேள்வி 10: முஹம்மதுவின் தோழர்களில்/உறவினர்களில் ஹதிஸ்களை அதிகமாக சொன்னவர்கள் யார்? 
  11. கேள்வி 11: ஹதீஸ்களை அறிவித்தவர்களில் அபூ ஹுரைரா முதலிடம் வகிக்கிறாரே! இவர் முஹம்மதுவோடு நபித்துவ தொடக்கம் முதல் இருந்தாரா?
  12. கேள்வி 12: முஹம்மது சென்றுவிட்ட பிறகு "அவரது சொல் மற்றும் செயல்களை ஹதீஸ் புத்தகங்களாக தொகுத்துக் கொள்ளுங்கள்" என்று குர்‍ஆனில் ஏதாவது வசனம் உண்டா?
  13. கேள்வி 13: குர்‍ஆன் வசனங்களின் பின்னணி ஹதீஸ்களில் கிடைக்கும் என்கிறார்களே, அனைத்து குர்‍ஆன் வசனங்களுக்கும் பின்னணியை ஹதீஸ்களில் காணலாமா?
  14. கேள்வி 14: முஹம்மதுவின் சரித்திர நூல்களில் சொல்லப்பட்டவைகளோடு ஹதீஸ்கள் முரண்படுமா?
  15. கேள்வி 15: சாத்தானின் வசனங்கள் பற்றி ஹதீஸ்களில் இல்லை என்றுச் சொல்வது உண்மையா?
  16. கேள்வி 16: சாத்தானின் வசனங்கள் பற்றிய பின்னணியை சுருக்கமாக விளக்கமுடியுமா?
  17. கேள்வி 17: சன்னி ஹதீஸ்கள் ஆறும் தமிழாக்கம் செய்யப்பட்டு இணையத்தில் கிடைக்குமா?
  18. கேள்வி 18: தபரி என்ற இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் பற்றி சிறிது விளக்கவும்.
  19. கேள்வி 19: முஹம்மது தமது மரணத்தருவாயில் யூத கிறிஸ்தவர்களை சபித்ததாக வரும் ஹதீஸ் எது?
  20. கேள்வி 20: "ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி" எழுதிய “ரஹீக்” புத்தகத்தின் முக்கியத்துவம் என்ன?
  21. கேள்வி 21: முஹம்மது பாவங்கள் செய்யவில்லை என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள், ஆனால் அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரியதாக ஹதீஸ்களில் உள்ளது என்கிறார்கள், இது உண்மையா?
  22. கேள்வி 22: ஹதீஸ்களில் விஞ்ஞான பிழைகள் உண்டா? நிலவு பிளந்த அற்புத்தத்தை முஹம்மது செய்தாரா?
  23. கேள்வி 23: ஷியா முஸ்லிம்கள் எத்தனை ஹதீஸ் தொகுப்புக்களை பின்பற்றுகிறார்கள்
  24. கேள்வி 24: முதலில் எழுதப்பட்டவைகள் எவை? ஹதீஸ்களா அல்லது முஹம்மதுவின் சீரா என்கின்ற வாழ்க்கை சரிதை நூல்களா?
  25. கேள்வி 25: அல்லாவிற்கு 99 பெயர்கள் உள்ளன என்றுச் சொல்லும் ஹதீஸ் எது?
  26. கேள்வி 26: ஹதீஸ்களை தொகுத்தவர்கள் யார்? (முஹம்மதுவா? சஹாபாக்களா?)
  27. கேள்வி 27: இப்னு இஷாக்கின் "ஸீரத் ரஸூல் அல்லாஹ்" புத்தகத்தை எங்கு வாங்கலாம்?
  28. கேள்வி 28: முஹம்மதுவின் காலத்தில் ஒரு கிறிஸ்தவன் முஸ்லிமாக மாறி, முஹம்மதுவின் வஹியை எழுதுபவனாக இருந்து, மறுபடியும் இஸ்லாமை விட்டுவிட்டதாகச் சொல்கிறார்களே, இதைப் பற்றிய ஹதீஸ் இருந்தால் கொடுக்கமுடியுமா?
  29. கேள்வி 29: ஹதீஸ்களில் இந்தியா பற்றி ஏதாவது விவரங்கள் உள்ளன?
  30. கேள்வி 30: "கஜ்வா ஈ ஹிந்த்(Ghazwa-e-Hind - Battle of India)" என்ற  பெயரில் முஹம்மது “இந்தியாவின் மீது முஸ்லிம்களின் யுத்தம்” பற்றி முன்னறிவித்தார் என்று சொல்கிறார்களே, இது என்ன?

9. தலைப்பு: பெண்கள் (30 கேள்வி பதில்கள்)

  1. கேள்வி 1: கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம், இதில் எந்த மார்க்கம் பெண்களை கௌரவப்படுத்துகிறது?
  2. கேள்வி 2: குர்‍ஆனில் வரும் ஒரே பெண்ணின் பெயர் என்ன? இப்படி குர்‍ஆனை அமைத்த அல்லாஹ் எதனை சொல்ல வருகின்றான்?
  3. கேள்வி 3: பெண்களை அடிப்பதற்கு குர்‍ஆன் அனுமதியளிக்கிறது என்றுச் சொல்வது பொய் தானே!
  4. கேள்வி 4: பெண்களை திருத்தமுடியாது என்று முஹம்மது  கூறியுள்ளாரா?
  5. கேள்வி 5: அதிக சாபமிடுபவர்கள், அறிவு மற்றும் மார்க்க கடமை குறைவு உள்ளவர்கள், கணவனுக்கு நன்றி கெட்டவர்கள், நரகத்தில் அதிகமாக உள்ளவர்கள் பெண்கள் என்று கூறியது யார்?
  6. கேள்வி 6: பெண்கள் அறிவில் குறைவு - இதற்கு காரணம் கு‍ர்‍ஆனின் கட்டளை என்று முஹம்மது கூறியிருக்கும்  போது, முஹம்மதுவை ஏன் குற்றப்படுத்தவேண்டும்?
  7. கேள்வி 7: ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது என்று முஹம்மது கூறினாரா?
  8. கேள்வி 8: பெண் தீர்க்கதரிசிகள் இல்லை என்று குர்‍ஆன் சொல்கிறதா?
  9. கேள்வி 9: பெண் தீர்க்கதரிசிகள் உண்டென்று பைபிள் சொல்கிறதா?
  10. கேள்வி 10: முதல் மனைவியின் அனுமதியுடன் தான் முஸ்லிம்கள் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்கிறார்களா? 
  11. கேள்வி 11: நரகத்தில் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று முஹம்மது கண்டாரா?
  12. கேள்வி 12: முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமான பெண்கள் அவர்களுக்கு என்ன உறவு?
  13. கேள்வி 13:  போரில் பிடிபட்ட  பெண்கள் பற்றி பழைய ஏற்பாடும் சொல்கிறதல்லவா? ஏன் குர்‍ஆனை மட்டுமே குற்றப்படுத்துகிறீர்கள்?
  14. கேள்வி 14: முஸ்லிம் பெண்கள்  மாதவிடாய் நேரத்தில் குர்‍ஆனை தொடக்கூடாது, மசூதிக்குள் வரக்கூடாது, தொழுகையும் செய்யக்கூடாது என்கிறார்களே, இது உண்மையா?
  15. கேள்வி 15: கிறிஸ்தவ பெண்கள் மாதவிடாய் நேரத்தில் பைபிளை படிக்கலாமா? சர்சுக்குச் சென்று தேவனை ஆராதிக்கலாமா?
  16. கேள்வி 16: கிறிஸ்தவ பெண்கள் மாதவிடாய் நேரத்தில் பைபிளை படிக்கலாம், சர்சுக்குப் போகலாம் என்பதை புதிய ஏற்பாட்டிலிருந்து நிருபிக்கமுடியுமா?
  17. கேள்வி 17: முஹம்மது தம் மனைவியை அடித்துள்ளாரா?
  18. கேள்வி 18: சஹாபாக்கள் தம் மனைவிகளை அடித்துள்ளார்களா? முஹம்மது இதற்கு அனுமதி அளித்தாரா?
  19. கேள்வி 19: ஒரு முஸ்லிம் ஆணிடம் அவன் ஏன் தன் மனைவியை அடித்தான் என்று கேட்கக்கூடாது என்று முஹம்மது கூறியுள்ளாரா?
  20. கேள்வி 20: மனைவியை முகத்தில் அறையக்கூடாது என்று ஆண்களுக்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது, மிகப்பெரிய வரப்பிரசாதம் அல்லவா? அல்லாஹ்வின் அருள் அல்லவா?
  21. கேள்வி 21: அடிமைகளை மற்றும் காளையை  அடிப்பது போன்று பெண்களை அடிக்கக்கூடாது? ஏன் அடிக்கக்கூடாது என்பதற்கு முஹம்மது சொல்லும் காரணம் என்ன?
  22. கேள்வி 22: கணவன் உடலுறவுக்கு அழைத்தால், மனைவி வரவில்லையென்றால் காலைவரை மலக்குகள் அவளை சபித்துக்கொண்டு இருப்பார்களா?
  23. கேள்வி 23: மனைவியை அடிப்பதாக யோபு (பழைய ஏற்பாட்டு பக்தன்) அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தாரா?
  24. கேள்வி 24: முஹம்மதுவிற்கு ஒரு யூதப்பெண் விஷம் வைத்த மாமிசத்தை கொடுத்தாளாமே இது உண்மையா?
  25. கேள்வி 25: இயேசுவின் சீடர்களில் ஏன் ஒரு பெண் சீடரும் இல்லை?
  26. கேள்வி 26: கேள்வியை மாற்றி கேட்கிறேன், இயேசுவிற்கு இருந்த உள்வட்ட 12 சீடர்களில் ஏன் ஒரு பெண் சீடர் இல்லை?
  27. கேள்வி 27: ரோமன் கத்தோலிக்கர்களில் '(பெண்) துறவிகள்' இருக்கிறார்களே! கிறிஸ்தவம் இதனை அனுமதித்துள்ளதா?
  28. கேள்வி 28: பைபிளில் வாக்குபண்ணப்பட்ட ஆசீர்வாதங்கள் பெண்களுக்கும் பொருந்துமா?
  29. கேள்வி 29: ஒரு முஸ்லிம் பெண்ணும், அவளது குடும்பமும் இயேசுவை பின்பற்றினால், கிறிஸ்தவம் அவர்களுக்கு  எவைகளைத் தரும்?
  30. கேள்வி 30: இயேசு தனிப்பட்ட முறையில் பெண்களுக்காக என்ன செய்தார்?

தலைப்பு: எருசலேம் (20 கேள்வி பதில்கள்)

  1. கேள்வி 1: எருசலேம் நாள் (Jerusalem Day) என்பது என்ன? ஏன் இந்த நாளில் "எருசலேம் காசா சண்டை இவ்வாண்டு(2021), மே மாதம்" தொடங்கியது?
  2. கேள்வி 2: எருசலேம் யூதருக்கு சொந்தமா? முஸ்லிம்களுக்கு சொந்தமா?
  3. கேள்வி 3: எருசலேம் கடந்த 3000 ஆண்டுகளாக யார் யார் கைகளுக்கு மாறியது?
  4. கேள்வி 4: எருசலேமுக்காக இன்று சண்டை அவசியமா?
  5. கேள்வி 5: எருசலேமுக்காக யூதர்களும் முஸ்லிம்களும் சண்டையிட்டுக் கொள்வது போன்று, ஏன் கிறிஸ்தவர்கள் சண்டையிடுவதில்லை?
  6. கேள்வி 6: மே மாதம் 2021 அன்று நடந்த இஸ்ரேல் காசா சண்டை - கிறிஸ்தவர்கள் யார் பக்கம்?
  7. கேள்வி 7: எருசலேம் முஸ்லிம்களுக்கு மூன்றாவது புனித ஸ்தலமாக மாறியது எப்போது?
  8. கேள்வி 8: காபா மற்றும் எருசலேம் ஆலயத்திற்கு இடையே 40 ஆண்டுகள் இடைவெளியா?
  9. கேள்வி 9: எருசலேம் கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமா?
  10. கேள்வி 10: எருசலேம் என்ற பெயர் குர்‍ஆனிலும், பைபிளிலும் எத்தனை முறை வருகிறது?
  11. கேள்வி 11: கி.பி. 638ல் எருசலேம் தலைவர்கள், “தங்களை ஆளும்படி கலிஃபா உமர் அவர்களிடம் வலியச்சென்று கேட்டுக்கொண்டார்கள்” என்கிறார்களே, இது உண்மையா?
  12. கேள்வி 12: கிறிஸ்தவர்கள் எருசலேமுக்காக போர் செய்யவில்லை என்பது பொய் தானே! சிலுவைப்போர்கள் எருசலேமை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றத்தானே செய்யப்பட்டன?
  13. கேள்வி 13: "எருசலேமுக்கும் முஸ்லிம்கள் புனித (ஹஜ்) பயணம் மேற்கொள்ளலாமா?
  14. கேள்வி 14: யூதர்கள் இயேசுவை நம்பவில்லை, இன்றும் நம்புவதில்லை, இருந்தபோதிலும் ஏன் கிறிஸ்தவர்கள்(சில  நாடுகள்) யூதரகளை/இஸ்ரேல் நாட்டை இன்றும் ஆதரிக்கின்றனர்?
  15. கேள்வி 15: கலிஃபா "அப்துல் மாலிக் இப்னு மர்வான்" என்பவருக்கும் எருசலேமுக்கும் என்ன சம்மந்தம்?
  16. கேள்வி 16: மேற்குச்சுவர்(Western Wall), அழுகைச் சுவர் என்றால் என்ன?
  17. கேள்வி 17: பழைய எருசலேம் நகரை எப்போது இஸ்ரேல் மறுபடியும் தன் கைவசப்படுத்தியது?ஆறு நாள் யுத்தம் என்றால் என்ன?
  18. கேள்வி 18: எருசலேமில் முஹம்மது தம் வாழ்நாளில் ஒரு முறையாவது கால் வைத்துள்ளாரா?
  19. கேள்வி 19: இன்றைய  எருசலேமிலுள்ள சிறப்புமிக்க விவரங்கள் என்ன?
  20. கேள்வி 20: எருசலேம் சின்ட்ரோம்(Jerusalem Syndrome) என்றால் என்ன?

சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000 தொடுப்பு

உமர் கட்டுரைகள் பக்கம்